சிமிண்ட், கம்பி, மணல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் தீர்மாணம்.

Posted February 08, 2015 by Adiraivanavil in Labels:
, முத்துப்பேட்டையில் நேற்று கட்டுமான தொழிலாளர் சங்கத்தின்
திருவாரூர் மாவட்ட 22-வது மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் சிங்காரவேல், மாநில துணைத் தலைவர் சிவகுமார், சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் முருகையன், மாவட்ட துணைச் செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் தலைவர் ராஜ்மோகன், த.மு.எ.க.ச செயலாளர் செல்லதுரை, பழவியாபாரிகள் சங்கத் தலைவர் காளிமுத்து ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினார்கள். அப்பொழுது கூட்டத்தில் கட்டுமாண தொழிலாளர்களுக்கு விபத்து நிதி ரூ.5 லட்சம் என்பதை அரசு ஆணையமாக வெளியிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு மத்திய சட்டம் 1996-ஐ அமுல்படுத்த வேண்டும். சிமிண்ட், கம்பி, மணல் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். மாத பென்சன் 3 ஆயிரமும், இயற்கை மரணத்திற்கு 1 லட்சமும், மற்ற அனைத்து பணப்பலன்களையும் இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் உட்பட முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் அருணகிரி, கருணாநிதி, காளிமுத்து, சம்சுதீன், ஆல்பர்ட் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். ஒன்றிய செயலாளர் ராமையன் நன்றி கூறினார்.

படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “சிமிண்ட், கம்பி, மணல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் தீர்மாணம்.”