முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள
ஓ.எம்.ஏ மெட்ரிக்குலேஷன் பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளியில் முதல்வர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னதாக மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்ட பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகளை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீசார் குணசேகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை