அதிரை ஆறு பகுதியில் ஆலா பறவை அதிகளவில் வருகை (படங்கள்இணைப்பு)

Posted February 03, 2015 by Adiraivanavil in Labels:
  • அதிராம்பட்டினம் ஆற்று பகுதியில் ஆலா பறவை வரத்து அதிகரித்துள்ளது 
    ஆலா பருமனில் புறாவை விட சற்றே மெலிந்திருக்கும். நீண்டு, அகலக் குறைவான, வளைந்த இறக்கைகளைக் கொண்டது ஆலா. அதன் வால் சிரகுகள் மீனின் வால் பொன்ற அமைப்பில் இருக்கும். இறக்கைகளின் மேல் புரம் சாம்பல் நிறத்திலும் அடிப் புரமும் வயிறும் வெள்ளையாகவும் இருக்கும். 
  • இப்பறவையின் கால்கள் குட்டையானவை. தலை, கழுத்து, மார்பு, வயிறு, கால்கள், அலகு இவற்றின் நிறம் ஒவ்வொரு வகை ஆலாவில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். 
  • ஆலாக்கள் இரை தேடுவதற்காக அதிராம்பட்டினம் ஆற்றுப்பகுதியில்அதிகளவில் வரதொடங்கியது
  •  ஆற்று தண்ணீர் மேல் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும். திடீரென ஒரு ஆலா செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் வாயில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும்.
  •  அப்படிப் பறக்கும் போதே வாயில் உள்ள மீனை உயரத் தூக்கி எறிந்து மீன் தலை கீழாக வரும் போது மீண்டும் அதனைக் கவ்வி விழுங்கும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா?
  •  இப்படிச் செய்யவில்லை என்றால் மீனின் செதிள்கள் பறவையின் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். மீன் உள்ளே போகாது அதனால்தான்
  • தற்போது.ஆற்று ஆலா  நம் ஊர்களில் ஆறு, ஏரிகளின் தற்போது காணலாம்










0 comment(s) to... “அதிரை ஆறு பகுதியில் ஆலா பறவை அதிகளவில் வருகை (படங்கள்இணைப்பு) ”