முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மருத்துவ மனையில்
அதிகம் கவனிக்க வேண்டிய கர்ப்பணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் புஷ்பா தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கரன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில் அதிகம் கவனிக்க வேண்டிய கர்ப்பிணிகளுக்கு டாக்டர் விஜயா தனபால் தலைமையில் டாக்டர்கள் சத்யா, வேம்பிரித்தியா, குருசங்கர், கோகுல் ஆனந்த் ஆகியோர் மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதில் ஸ்கேன், உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டது. 71 கர்ப்பிணிகள் பயன் பெற்றனர். இதில் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ஹரிபாஸ்கா, வட்டார செவிலியர் அன்னப்பூரனி, பகுதி செவிலியர் அஞ்சம்மாள் உட்பட மருத்துவ அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
படங்கள் செய்திகள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை