முத்துப்பேட்டையில் தேசிய குடல் புழு நீக்க நாள் விழா!

Posted February 12, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார
நிலையம் சார்பில் நேற்று புதுத்தெரு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய குடல் புழு நீக்க நாள் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். அரசு மருத்துவர் அரவிந்குமார் முன்னிலை வகித்தார், அரசு மருத்துவர் ஜான் ஜோஷிக் மாணவர்களுக்கு குடற்புழு தொடர்பான விவரங்களை விளக்கினார். மேலும் குடற்புழுவால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கப்படமாக மாணவர்களுக்கு காட்டப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், ராஜேஷ், கிராம சுகாதார செவிழியர் சாந்த குமாரி, பகுதி சுகாதார செவிழியர் அஞ்சம்மாள் ஆகியோர் குடற்புழு அழிப்பு மாத்திரைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி அதே இடத்தில் சாப்பிட வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய அந்தோணிராஜ், ஆசிரியர் செல்வசிதம்பரம், அங்கன்வாடி பணியாளர் புனிதா மற்றும் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியை கலந்துக்கொண்டனர்

படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை.



0 comment(s) to... “முத்துப்பேட்டையில் தேசிய குடல் புழு நீக்க நாள் விழா!”