முத்துப்பேட்டையில் ஆம்னி பஸ் கதவு திறந்து கணவன், மனைவி படுகாயம்.

Posted February 04, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த காடம் சேத்தி கிராமத்தைச்
சேர்ந்தவர் பண்டரிநாதன்(50). இவரது மனைவி முத்துலட்சுமி(47). இருவரும் ஒரே பைக்கில் பேட்டை கிராமத்தில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்ல அதே பைக்கில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கோயம்புத்தூரிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்து நின்று கொண்ருந்த தனியார் ஆம்னி பசின் கதவை டிரைவர் திறந்ததால் பைக் மீது பட்டு கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார். 


படங்கள் செய்திகள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் ஆம்னி பஸ் கதவு திறந்து கணவன், மனைவி படுகாயம்.”