ஐ.தே.ம.க. முன்னாள் நகர செயலாளர் முகம்மது யுசுப் பேட்டி

Posted February 25, 2015 by Adiraivanavil in
அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய தேசிய மக்கள் கட்சி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது இதன் நகர செயலாளராக செயல்பட்டு வந்தார் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரின்
அறிக்கையில் முகம்மது யுசுப் கட்சியின் நகர செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்திருந்ததை அதிரை வானவில் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இதனைத்தொடர்ந்து முகம்மது யுசுப் அதிரை வானவில் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

நான் கடந்த சில மாதங்களாக ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நகர செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தேன் எனது சொந்த பணிச்சுமை காரணமாகவும் கட்சியின் நிர்வாகிகளின் கருத்து வேறுபாடு காரணமாக நானாகவே விலகிக்கொண்டேன் என்னை யாரும் நீக்கவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன் விரைவில் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


0 comment(s) to... “ஐ.தே.ம.க. முன்னாள் நகர செயலாளர் முகம்மது யுசுப் பேட்டி”