வெளிநாடு வாழ் இந்தியர்களின் குறை தீர்க்க ஆன்லைன் வசதி தொடக்கம்
Posted February 22, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவும் வகையில், அவர்களின் குறைகளை ஆன்லைனிலேயே அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் புதிய இணைய பக்கத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அங்கு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, அரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்கள் பல சமயங்களில் ஏமாற்றப்படுகின்றனர். அங்கு உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இத்தகைய குறைகளை தீர்க்கும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவ மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் புதிய இணைய பக்கத்தை தொடங்கி உள்ளது.
வெளியுறவு அமைச்சக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் �மதாத்� (உதவி) என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ள இந்த ஆன்லைன் சேவையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அங்குள்ள இந்திய தூதரகத்தை தேடிச் சென்று புகார்களை தெரிவிப்பதற்கு பதிலாக, ஆன்லைனிலேயே இனி பதிவு செய்யலாம். இதில் வரும் புகார்களை, சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகள் மட்டுமின்றி, இந்தியாவில் சென்னை, கவுகாத்தி, ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவில் அமைந்துள்ள வெளியுறவு அமைச்சக கிளை செயலாளர்களும் கவனிப்பார்கள்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த புகார்கள் பச்சை நிறத்திலும், நிலுவையில் உள்ள புகார்கள் சிவப்பு நிறத்திலும் குறிப்பிடப்படும். இதனால், நேரம் மிச்சமாவதுடன், அதிகாரிகளும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெரிதும் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சோதனை அடிப்படையில் இத்திட்டம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட 6 அரபு நாடுகள் மற்றும் மலேசியா ஆகிய 7 நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான மொபைல் அப்ளிகேஷனை உருவாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
0 comment(s) to... “வெளிநாடு வாழ் இந்தியர்களின் குறை தீர்க்க ஆன்லைன் வசதி தொடக்கம்”