முத்துப்பேட்டை அருகே மனைவியுடன் தகராறு குடி போதையில் வீட்டை கொழுத்திய கணவன்
Posted February 19, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் துறைதோப்பு
கிராமம், சீதாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம,; இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சுமதிக்கும் திருமணமாகி 4-வருடம் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. இந்த நிலையில் ராஜமாணிக்கம் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி சுமதியிடம் தகராறு செய்வராம். அதேபோல் நேற்று குடித்து விட்டு வந்த ராஜமாணிக்கம், மனைவி சுமதியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியேற கூறியுள்ளார.; இதற்கு மனைவி சுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ராஜமாணிக்கம் ஆத்திரப்பட்டு தனது கூரை வீட்டை தீவைத்தார். தீ மளமளவென்று பிடித்து எரிந்தது. உடன் அக்கம்பக்கத்தினர் முத்துப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுக்குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மனைவி சுமதி புகார் கொடுத்தார். அதன் பேரில் முத்துப்பேட்டை போலீசார் கணவன் ராஜமாணிக்கத்தை பிடித்து விசாரணை நடத்திவருகிறார்.
படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே மனைவியுடன் தகராறு குடி போதையில் வீட்டை கொழுத்திய கணவன்”