முத்துப்பேட்டை அடுத்த பேட்டை வெள்ளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Posted February 09, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த பேட்டை தாமரைக்குளம் தென்கரையில்
உள்ள அருள்மிகு ஸ்ரீவெள்ளை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாகப்பூஜை நடைபெற்று அதனை தொடர்ந்து ரக்ஷாபந்தனம், பிம்பசுத்தி, ஸ்பர்ஷாஹீதி, திராவ்யாஹீதி நடைபெற்றது. பின்னர் மஹா பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ராதானத்துடன் கடம் புறப்பட்டு விமானத்தை வந்தடைந்தது. அதன் பின்னர் கோவிலில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மூலஸ்தான கும்பாபிஷேகம், பரிகார மூர்;த்தி கும்பாபிஷேகம், சிறப்பு மஹா தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த அ10யிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டை அடுத்த பேட்டை வெள்ளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்”