ரூ.9 கோடி செலவில் உருவான மகாத்மா காந்தியின் வெண்கல சிலை: இங்கிலாந்தில் மார்ச் 14-ல் திறப்பு விழா
Posted February 22, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
இந்த சிலை வரலாற்று சிறப்புமிக்க இங்கிலாந்தின் நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைக்கப்பட உள்ளது. 1931-ல் இங்கிலாந்து வந்த காந்தியின் உருவப்படத்தை மாடலாக வைத்து புகழ்பெற்ற சிற்பக்கலைஞர் பிலிப் ஜாக்சன் இந்த சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
இந்த சிலையை அமைப்பதற்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு ஆறே மாதத்தில் 10 லட்சம் பவுண்டு (9.56 கோடி) நிதியாக கிடைத்து. இந்தியா இங்கிலாந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பலர் நன்கொடை அளித்தனர். இதற்கு இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 1 லட்சம் மற்றும் இன்போசிஸின் கே.வி.காமத் 2.5 லட்சமும் கொடுத்தனர்.
மார்ச் 14-ம் தேதி நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் மத்திய மந்திரி அருண் ஜேட்லி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comment(s) to... “ரூ.9 கோடி செலவில் உருவான மகாத்மா காந்தியின் வெண்கல சிலை: இங்கிலாந்தில் மார்ச் 14-ல் திறப்பு விழா”