30 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீரைத் தயாரித்து 50 பைசாவுக்கு விற்று மக்களின் தாகம் தீர்க்கும் அதிசய கிராமம்

Posted February 02, 2015 by Adiraivanavil in Labels:

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுசுதன்கதி என்ற கிராம மக்கள் ஒருகாலத்தில் விஷத்தன்மையுள்ள மாசுபட்ட நிலத்தடி நீரை குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள மாற்றம் அருகிலுள்ள கிராமங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிராம கூட்டுறவு சொசைட்டியான ‘மதுசுதன்கதி சமாபாய் கிரிஷி உன்னயன் சமிதி’ பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு அழுக்கு நீரை சுத்திகரிக்கும் ஆலை ஒன்றை நிறுவியது. இதில் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய படிகாரம், யுவி வடிகட்டி உட்பட நான்கு கட்டமாக சுத்திகரிப்பு செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த விலையில் அதிக தண்ணீரை சுத்தப்படுத்தும் இந்த தொழில்நுட்பத்தால் ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரை உருவாக்க 30 பைசா மட்டுமே செலவாகிறது. இதை இந்த கிராம மக்கள் 50 பைசாவுக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கும் வினியோகிக்கின்றனர்.

இதுகுறித்து கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் ஹலதர் சர்மா கூறுகையில், “தற்போது நாங்கள் ஒவ்வொரு நாளும் 2000 லிட்டர் தண்ணீரை சுத்தமாக்கி ஜாடிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி அதை விற்பனை செய்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு வெளியே உள்ள 200 குடும்பங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்" என்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் உட்பட ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையான விஷத்தன்மையுள்ளதாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.நன்றி மாலைமலர்


0 comment(s) to... “30 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீரைத் தயாரித்து 50 பைசாவுக்கு விற்று மக்களின் தாகம் தீர்க்கும் அதிசய கிராமம்”