அதிராம்பட்டினம் பகுதியில் நெல் வயல்களில் காட்டு பன்றிகள் அட்டகாசம்
Posted February 24, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பகுதியில் அலையாத்திகாடுகள் உள்ளன இந்த காடுகளில் காட்டுபன்றி நரி முயல்கள் போன்ற வன விலங்குகள் வசிக்கின்றன
அலையாத்திகாடுகளை சுற்றிவுள்ள கரிசைக்காடு, முடுக்கு காடு, வன்னிபுலகாடு, கருங்குளம், மரலகாடு, மஞ்சவயல் ஆகிய கிராமம் உள்ளது. இந்த பகுதி கடைமடை பகுதி என்பதால் தற்போது இங்கு நெல் பயிரிடப்பட்டு இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் அலையாத்தி காட்டு பகுதியில் இருந்து காட்டு பன்றிகள் கூட்டம்கூட்டமாக விவசாயம் செய்யும் இடத்துக்கு வந்து பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காட்டு பன்றியிடம் இருந்து பாதுகாக்க வயல்களில் கூடாரம் அமைத்து தீப்பந்தங்களுடன் இரவு நேரத்தில் கண்விழித்து காவல் காக்கின்றனர். இதுகுறித்து விவசாயி சுப்பையன் கூறியதாவது:–நாங்கள் இருக்கும் பகுதி கடைமடை பகுதி என்பதால் தற்போதுதான் விவசாயம் நடைபெற்று வருகிறது. இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ளது. இந்த நிலையில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களை நாசப்படுத்துகிறது.இதனால் நாங்கள் இரவு முழுவதும் தூங்காமல் வயல் பகுதில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே வனத்துறையினர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.0 comment(s) to... “அதிராம்பட்டினம் பகுதியில் நெல் வயல்களில் காட்டு பன்றிகள் அட்டகாசம்”