அதிரையில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம்: கலெக்டர் பங்கேற்பு
Posted February 08, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்புகள் நகரத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும். தற்போது தமிழக அரசின் ஆணைக்கிணங்க எங்கு பேரிடர் அதிகமாக நடைபெறுகிறதோ அவ்விடத்தில் பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்துடன் செஞ்சிலுவை சங்கம் இணைந்து இந்நிகழ்ச்சி இந்த பகுதியில் நடத்தப்பட்டது.
பேரிடர் மேலாண்மை என்பது முன்பு மிக பெரிய இழப்பை குறிப்பதாக இருந்தது. ஆனால் இன்று சாலை விபத்து, கட்டிட இடிபாடுகள் போன்றவைகளும் பேரிடர் மேலாண்மையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அலுவலக பணியாளர்களுக்கு தரப்படுகின்ற பேரிடர் பயிற்சி ஒவ்வொரு முறையும் புதிய பயிற்சியாக எண்ணி பயிற்சியை வேண்டும். ஒருவருக்கு 100 சதவிகித இழப்பினை தவிர்க்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இங்கு தரப்படுகின்ற பயிற்சியை உள்வாங்கி கொண்டு பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்பீடுகளை தவிர்க்க வேண்டும்.
இயற்கை இடர்பாடுகளை எந்த இடத்தில் நடைபெறும் என்பது நாம் அறிந்து அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்பினை நன்கு அறிந்து கொண்டு ஒருபடி முன்னேறி பேரிடரிலிருந்து திறம்பட வெற்றி கொண்டு பொதுமக்களின் உயிர் காக்க உரிய நேரத்தில் திறம்பட செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்பயிற்சி வகுப்பில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அரங்கநாதன், இந்தியன் செஞ்சிலுவை சங்க கவுரவச் செயலாளர் வசந்தா கோவிந்தராஜன், வட்டாட்சியர்கள் சேதுராமன், மாணிக்கவள்ளி, துணை வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால முத்துகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 comment(s) to... “அதிரையில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம்: கலெக்டர் பங்கேற்பு”