முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தைச்
சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(60). இவர் தனது பைக்கில் வேதாரண்யத்தில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். விளாங்காடு பாலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது படடுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் சென்ற அரசு பேருந்து ஒன்று அவரது பைக் மீது மோதியது. இதில் அய்யம் பெருமாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் காணப்பட்டதால் பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து பேருந்து டிரைவர் சௌந்தர் ராஜனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள் படங்கள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை