அதிராம்பட்டினத்தில் உப்பு உற்பத்திக்கு கடல்நீர் பாய்ச்சும் பணி துவக்கம்
Posted February 08, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
நேற்று சில உப்பளங்களில் பாத்தி மிதித்தல் பணி நடைபெற்றது. சில உப்பளங்களில் அனைத்து வேலைகளும் முடிந்து கடல்நீரை பாய்ச்சும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் இறுதிக்குள் உப்பு உற்பத்தி துவங்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் கூறுகையில், அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள உப்பளங்களில் முதல்கட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளது. தற்போது, கடல்நீரை உப்பள பகுதியில் உள்ள சேமிப்பு பாத்திகளில் நிரப்பப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் பொன் உப்பு வாருதல் நடைபெறும் என்றார்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் உப்பு உற்பத்திக்கு கடல்நீர் பாய்ச்சும் பணி துவக்கம்”