அதிரையில் தைப்பூசத் திருவிழா பால்குடம் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்(படங்கள்இணைப்பு)
Posted February 03, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் தைப்பூச
திருவிழா இன்று காந்திநகர் முத்துக்குமரசுவாமி கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் தைப்பூசத்தையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து முருக பக்தர் சாமி அருளோடு ஆண்களும், பெண்களும் சிறுவர்- சிறுமிகளும் பால்குடம் எடுத்தபடி பக்தி பரவசத்துடன் சென்றனர். இதனையடுத்து மனப்பங்குளம் பிள்ளையார் கோவிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து பேருந்துநிலையம் வழியாக முருகன் கோவிலை வந்தடைந்தது பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
படங்கள் காளிதாஸ்0 comment(s) to... “அதிரையில் தைப்பூசத் திருவிழா பால்குடம் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்(படங்கள்இணைப்பு)”