அதிரை பகுதியில் விபத்துகளை தடுக்க கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
Posted February 07, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் வழியாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலை களில் வாகனங்கள் அனை த்தும் நேரத்தை கணக்கில் கொண்டு 120 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன. இதனால் அதிராம்பட்டினம் பகுதி யில் மட்டும் தினம்தோறும் விபத்துகள் நடக்கிறது. அதிராம்பட்டினத்திலிருந்து கட்டுமாவடி வரை கிழக்கு கடற்கரை சாலை யின் இருபுறங்களிலும் 100க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள் கிராமப்புறங்களிலிருந்து வந்து சேர்கிறது. இந்த சாலைகள் இணையும் இடங்களில் அவரவர் பட்டா நிலம் உள் ளது. இதனால் கிழக்கு கடற் கரை சாலையில் வரும் வாகனங்கள் தெரியாதவாறு கட்டிடங்களை கட்டி கடை தொழிலும், வீடுகளில் குடியிருந்தும் வருகின்றனர். இதுவரை இந்த பகுதிகளில் விபத்துகளால் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இணை ப்பு சாலைகள் அனைத் திலும் உள்ள வேலிகருவை மரங்கள் அனைத்து சாலைகளி லும் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comment(s) to... “அதிரை பகுதியில் விபத்துகளை தடுக்க கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?”