கர்ப்பப்பை கொண்ட அதிசய மனிதர்-தாய்மையடைய முழுத் தகுதியுடன் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சர்யம்
Posted February 08, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
சில நாட்களாக தன் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியாவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த தொழிலதிபர் (37) உடனடியாக மருத்துவனைக்குச் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீர்ப்பையில் புற்று நோய் இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு புற்று நோய்க்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ. கருவி மூலம் அவரது உடலை முழுமையாக ஸ்கேனிங் செய்து பரிசோதித்தனர். ஸ்கேன் செய்யப்பட்ட படங்களைப் பார்க்கும்போது அவருக்கு கர்பப்பை இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதை விட கர்ப்பப்பை வாய், சினைப்பை, கருமுட்டை, பெலோபியன் குழாய் என்று ஒரு தாய்மை அடையக் கூடிய பெண்ணிற்குத் தேவையான அனைத்தும் அவருக்கு இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பின்னர் அவரிடம் சிறுநீரில் ரத்தம் வந்ததற்கு காரணம் புற்று நோய் அல்ல என்றும், அது மாதவிடாய் எனவும் கூறிய மருத்துவர்கள் விடலை பருவத்திலிருந்தே அவருக்கு விந்து மற்றும் சிறுநீரிலிருந்து ரத்தம் வெளியாகியுள்ளதையும் விளக்கினர்.
தனது விசித்திரமான வாழ்க்கை குறித்து அலிசன் ஸ்மித் ஸ்கொயர் என்ற பத்திரிகையாளரிடம் பகிர்ந்து கொண்ட அவர், “சிறுவனாக இருந்த போது எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. விடலை பருவத்தில் பூப்பெய்துவதால் வரக்கூடிய இயற்கையான உடல் மாற்றங்கள் எனக்கும் நிகழ்ந்தது. ஆனால் என்னுடைய இருபதுகளில் உடலுறவின் போதும், உடலுறவுக்கு பின்பும் மந்தமான வலியை உணர்ந்தேன். பரிசோதனை முடிவுகள் நான் ஆண் மற்றும் பெண் தன்மையோடு இருப்பதைக் காட்டுகிறது.
ஆனால் நான் ஒரு ஆணாக வாழ்ந்து வருகிறேன்” என்றார். மான்செஸ்டர் பல்கலைக் கழக மருத்துவமனையில் நடத்தப்பட உள்ள அறுவை சிகிச்சையில் கர்ப்பப்பையை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் பின் ’மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய் சுழற்சி நின்ற நிலையை அவர் அடைவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நன்றி மாலைமலர்

0 comment(s) to... “கர்ப்பப்பை கொண்ட அதிசய மனிதர்-தாய்மையடைய முழுத் தகுதியுடன் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சர்யம்”