அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டர் போலீசார் பறிமுதல்!
Posted February 06, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பகுதியில் அடிக்கடி மணல் கொள்ளை
சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றில் அனுமதி இல்லாமல் டிராக்டர் மணல் அள்ளி வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட ஆற்றில் அதிரடி சோதனையிட்டனர். அப்பொழுது டிராக்டர் ஒன்று மணல் திருடிக்கொண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். போலீசை கண்டதும் டிரைவர் தப்பி ஓடினார். இதனையடுத்து ஜம்புவானோடை வடகாடு ரவிக்கு சொந்தமான அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்;.
படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “ அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டர் போலீசார் பறிமுதல்!”