அதிரையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் பலத்த காயம் -பரபரப்பு

Posted February 02, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினத்தில் கிழக்குகடற்கரை சாலைபுதிய ஹவான் ஹோட்டல் அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்
கொண்டதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். மல்லிபட்டினத்தை சேர்ந்தவர் சேக் அப்துல்லா இவரது மகன் முஹம்மது அசாருதீன் ( வயது 24 ), அதே பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் இவரது மகன் நூருல் ஹசன் ( வயது 25 ). ராஜமடத்தை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 45 ). இவர் அதிரை பேருந்து நிலைய பகுதியில் வாகன ஓட்டுனராக இருக்கிறார்.

இந்நிலையில்  நூருல் ஹசன் தனது இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் முஹம்மது அசாருதினுடன் மல்லிபட்டினத்திலிருந்து அதிரையை நோக்கி வந்துக்கொண்டிருந்தார் அப்போது  எதிரே வந்த மாரிமுத்துவின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் மூவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது இதனையடுத்து



 தஞ்சை மருத்துமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அதிராம்பட்டினம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இதனையடுத்து இந்த விபத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திவுள்ளது

படங்கள்
நன்றி அதிரைபிறை

செய்திகள்  மணிச்சுடர் நிருபர் சாகுல்ஹமீது 


0 comment(s) to... “அதிரையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் பலத்த காயம் -பரபரப்பு”