முத்துப்பேட்டைஅருகே ஆக்கிரமிப்பால் தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் அவதி

Posted December 05, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த எடை யூர் புதுத்தெரு அரசு மருத்துவமனை அருகே சி.வி.ஆர். ஐயர் என்பவர் தனக்கு சொந்தமான இட த்தை அரசுக்கு தானமாக வழங்கினார். இந்த இடத்தில் 10 வருடங்களுக்கு முன்பு 60 குடும்பங்களுக்கு அரசு இலவச குடியிருப்பு பட்டா வழங்கியது. அவர்கள் இந்த இடத்தில் ப வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழைநீர்
வடியும் வாய்க்கால்களை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனால் இப்பகுதி குடியிருப்புகளில் மழை நீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. இதனால் இங்கு வீடுகளை சுற்றிலும் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாடுகின்றன. இந்த மழை நீரை ஊராட்சி நிர்வாகம் அகற்ற முயற்சித்தும் வெளியேற்ற முடியவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தேங்கி உள்ள நீரை வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இந்த குடியிருப்பு பகுதியை அரசு மேடாக்கி தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நன்றி தினகரன்


0 comment(s) to... “முத்துப்பேட்டைஅருகே ஆக்கிரமிப்பால் தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் அவதி”