பேராவூரணி அருகே பெட்ரோமாக்ஸ் லைட்டில் இரிடியம் இருப்பதாக கூறி விற்க முயன்ற 10 பேர் கைது

Posted December 05, 2014 by Adiraivanavil in Labels:
பேராவூரணி அருகே பெட்ரோமாக்ஸ் லைட்டில் இரிடியம் இருப்பதாக கூறி ஏமாற்றி விற்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் அருகில் 10 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது. இவர்கள் நேற்று முன்தினம் பழைய பெட்ரோமாக்ஸ் லைட்டை காண்பித்து இரிடியம் உள்ளது. இதை வாங்கி வீட்டில் வைத்திருந்தால் செல்வம்
பெரு கும். நோய் வராது, அதிர்ஷ் டம் வந்து கொண்டே இருக்கும். இது 100 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.5 லட்சம் என்று ஏமாற்றி விற்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் இன்ஸ்பெக்டர் பழனிச் சாமி தலைமையில் போலீ சார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப் போது ஆவணம் அருகே நின்று கொண்டிருந்த மோசடி கும்பலை பிடித்து விசாரித்தனர்.
இதில் கொடைக்கானல், சிவகங்கை, திருமயம், மணமேல்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த கிருபாகரன் (27), ஷாஜகான் (37), மணிகண்டன் (28), இளங்கோவன் (32), மகாலிங்கம் (53), பக்ருதீன் (37), ரங்கசாமி (60), ராமையன் (52), முருகேசன் (65), மணிமாறன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்த பழைய பெட்ரோமாக்ஸ் லைட்டையும் காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “பேராவூரணி அருகே பெட்ரோமாக்ஸ் லைட்டில் இரிடியம் இருப்பதாக கூறி விற்க முயன்ற 10 பேர் கைது”