திருச்சியில் கலக்குது பத்து ரூபாய்க்கு ஆட்டோ-பாக்கெட்டை பதம் பார்க்காது

Posted December 05, 2014 by Adiraivanavil in Labels:

நீதிமன்ற உத்தரவையடுத்து, டிசம்பர் 1ம் தேதிக்குள் அனைத்து ஆட்டோக்களிலும் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி, முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இந்த முறை அமலுக்கு வந்தது.திருச்சி மாவட்டத்தில் குறைந்த கட்டணமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீக் கும் ரூ.12, காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.3.50, ஒரு
மணி நேரத்துக்கு ரூ.42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 வரை மட்டும் 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். ஒரு கிமீக்கு ரூ.12 என அரசு நிர்ணயித்த கட்டண த்தை காட்டிலும் குறைவாக ஒரு கிமீக்கு ரூ.10 மட்டுமே வசூலித்துக்கொ ண்டு திருச்சியில் மட்டும் 60 ஆட்டோக்கள் ஓடுகின் றன. இந்த ஆட்டோக்களை பத்து ரூபாய் ஆட்டோ என்றே விவரம் தெரிந்தவர்கள் அழைக்கின்றனர்.
பத்து ரூபாய் ஆட் டோவை நடத்தி வரும் �அபி� ஆட்டோ உரிமையா ளர் அரியமங்கலம் சாமிநாதன் கூறியதாவது:
நான் பணிபுரிந்துவந்த தனியார் நிறுவனம் திடீ ரென மூடப்பட்டதால், 3 ஆண்டு முன்பு, ஆட்டோ தொழிலுக்கு வந்தேன். தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக்குழு செயலாளர் புஷ்பவனம், ஆட்டோ டிரைவர்கள் கவனத்துக்கு என்ற புத்தகம் வழங்கினார். அதில், மீட் டர் போட்டு குறைந்த கட்டணத்தில் ஆட்டோ ஓட் டினால் என்ன நன்மை... மக்கள் அடையும் பயன்... லாபம் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏன் நாம் ரூ.10க்கு ஆட்டோ ஓட்டக்கூடாது என முடிவு செய் தேன். நண்பர்கள் சிலரை அழைத்து பத்து ரூபாய் ஆட்டோ ஓட்டும்படி கூறினேன். முதலில் தயங்கியவர்கள் பின்னர் ஒப்புக்காண்டனர். �அப் அண்ட் டவுன்� கட்டணம் வசூலிப்பதில்லை. பயணிகளை இற க்கி விட மட்டுமே கட்ட ணம் வசூலிக்கிறேன். பத்து ரூபாய் ஆட்டோ என்று தான் பயணிகள் அழைப்பர்.
ஸ்டாண்டில் இடம் கிடைப்பதில்லை. மிரட்டல் வருகிறது. இருந்தாலும் சிறு வயதிலிருந்தே கஷ்டப்பட்டு வந்ததால், மிரட்டல்கள் பெரிதாக தெரியவில்லை. என்னை சார்ந்து 60 ஆட் டோ டிரைவர்கள் இயங்குகின்றனர். வெளி சவாரிக்கு அவர்கள் எவ்வளவு வாங்கினாலும், நான் சொல்லும் சவாரிகளுக்கு ரூ.10 மட்டுமே கட்டணம் வாங்க வேண்டும் என கூறி உள் ளேன். குறை ந்த கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுவதால், அதிகளவு மக்கள் பயனடைவர். திருட்டு குறையும். ஷேர் ஆட்டோக் கள் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும்போது, சாதாரண ஆட்டோக் களால் இத்தகைய சேவையை நிச்சயம் வழங்க முடியும். இவ்வாறு சாமிநாதன் கூறினார்.நன்றி தமிழ்முரசு க் கு 


0 comment(s) to... “திருச்சியில் கலக்குது பத்து ரூபாய்க்கு ஆட்டோ-பாக்கெட்டை பதம் பார்க்காது”