அதிரையில் பட்டபகலில் நகைகடை உரிமையாளரிடம் கொள்ளை முயற்ச்சி பரபரப்பு(படங்கள் இணைப்பு )

Posted December 01, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் ஆப்பக்காரத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி பத்தர் இவருடைய மகன்  சேகர்  வயது 45  இவர்  ஆஸ்பத்திரி தெருவில் கடந்த சில வருடங்களாக பேபி ஜுவல்லரி  நகைகடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் . இவர் தினசரி இரவு கடையை அடைத்துவிட்டு நகைகளை வீட்டுக்கு எடுத்து செல்வதும் மீண்டும் காலை
நகைகளுடன் வந்து கடையை திறப்பது இவரின் வழக்கம்.


இந்நிலையில்


இன்று காலை 10மணியளவில் இவர் கடையை திறக்கும் போது முகம்முடி அணிந்து பயங்கர ஆயுடங்களுடன் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் சேகர் ரிடம் இருந்த நகை பையை கொள்ளையடிப்பதற்க்காக பிடுங்கியுள்ளனர்.இதனையடுத்து  சேகர் நகைப்பையை  விடாமல் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் திருடர்களை பிடிக்க முயற்சிக்கும் போது ஆயுதங்களை காட்டி மிரட்டி விட்டு ஓடிவிட்டனர்.

 இது பற்றி அதிராம்பட்டினம் காவல் துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாடும் பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு முயற்சி சம்பவத்தால் மக்கள் மத்தியில்பெரும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைபோல் சம்பவம்

கடந்த8 மாதத்திற்கு முன்னர் பேபி ஜுவல்லரி உரிமையாளர்களிடம் இது போல் நகை பையை கொள்ளையடிக்க கொலை வெறித்தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.















0 comment(s) to... “அதிரையில் பட்டபகலில் நகைகடை உரிமையாளரிடம் கொள்ளை முயற்ச்சி பரபரப்பு(படங்கள் இணைப்பு )”