அதிரையில் கடுங்குளிருடன் கடல் சீற்றம்4வது நாளாகமீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Posted December 01, 2014 by Adiraivanavil in Labels:




தஞ்சை மாவட்டத்தில் கடந்த 27ம்தேதி நள்ளிரவு தொடங்கிய மழை  இன்று வரை நீடித்தது.  மழை நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுஇன்று  இரவுவரைமழை காணப்பட்டது. மழையால் இன்று  
அதிராம்பட்டினம்

 கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங் குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உட்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 1,500 பாய்மர படகு, பைபர்கிளாஸ் படகு, கட்டுமரங்களும் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் 201 விசைப்படகுகளும் உள்ளன.  தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உரு வாகி இருப்பதால் மீனவர் கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண் டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடலோர பகுதிகளில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் மழை பெய்யவில்லை. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இருப்பி னும் கடற்கரை பகுதியில் தரைகாற்று பலமாக வீசி வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே மீன்வளத்துறை மாவட்ட உதவி இயக்குநர் வங்கக்கடலில் புயல் சின்னம் உரு வாகி உள்ள தால் தஞ்சை மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண் டாம் என எச்சரித்துள்ளார். அதன்படி, நேற்றுமுன்தினம் முதல் 4,000 நாட்டுப்படகு மீனவர் கள் கடலுக்கு செல்லவில்லை. கடலுக்குச் செல்ல வேண்டிய விசைப்படகு மீனவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறை முகங்களில் சேதம் ஏற்படாதவாறு மீனவர்கள் பத்தி ரமாக நிறுத்தி வைத்துள் னர்.




0 comment(s) to... “அதிரையில் கடுங்குளிருடன் கடல் சீற்றம்4வது நாளாகமீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.”