ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகளை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடிய கொள்ளையன்!

Posted December 01, 2014 by Adiraivanavil in Labels:


வங்கியில் கொள்ளையடித்த நகைகளை காவல்துறையை பார்த்ததும் சாலையிலேயே போட்டுவிட்டு ஓடியிருக்கிறான் ஒரு திருடன். புதுக்கோட்டையில் தான் இந்த பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகிலிருக்கிறது குளத்தூர். அங்கு சிட்டி யூனியன் வங்கி இருக்கிறது. நள்ளிரவு ஒரு மணி அளவில் கீரனூர் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் சாலையில் ஒருவன் ஒரு மூட்டையை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு
நடந்து போயிருக்கிறான். காவல்துறையினரை பார்த்ததும் அந்த மூட்டையை போட்டுவிட்டு ஓடியிருக்கிறான். ஒன்றுமே புரியாமல் காவல்துறையினர் அந்த மூட்டையை பிரித்துப் பார்த்திருக்கிறார்கள். பார்த்த அத்தனை பேருக்கும் மயக்கமே வந்திருக்கிறது. காரணம் மூட்டையில் இருந்தது அத்தனையும் தங்க நகைகள். அதன் மதிப்பு சுமார் பத்து கோடிகளை தாண்டும். அப்போது தான் காவல்துறையினருக்கு பொறி தட்டியிருக்கிறது. அருகிலிருந்த சிட்டி யூனியன் வங்கிக்கு போய் பார்த்திருக்கிறார்கள். அங்கு லாக்கர் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. நகைகளை கைப்பற்றிய காவல்துறையினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். எஸ்.பி.யும், ஐ.ஜி.க்கு தகவல் சொல்லியிருக்கிறார். இன்று காலை புதுக்கோட்டைக்கு வந்த ஐ.ஜி. காவல்துறையினரை பாராட்டினார்.





0 comment(s) to... “ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகளை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடிய கொள்ளையன்!”