அதிரை உள்பட 6 மாநிலங்களில் வங்கி ஊழியர்கள் நாளை (02.12.2014) வேலை நிறுத்தம்
Posted December 01, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநில வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெறுகின்றனர். இதையடுத்து தில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநில வங்கி ஊழியர்கள் வரும் 3ம் தேதியும், மேற்கு வங்கம், ஒடிஷா, பீகார், திரிபுரா உள்ளிட்ட மாநில வங்கி ஊழியர்கள் 4ம் தேதியும், குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநில ஊழியர்கள் 5ம் தேதியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
0 comment(s) to... “அதிரை உள்பட 6 மாநிலங்களில் வங்கி ஊழியர்கள் நாளை (02.12.2014) வேலை நிறுத்தம்”