தமிழகத்தில் மழை பெய்யும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

Posted December 08, 2014 by Adiraivanavil in Labels:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு
நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்துக்கு சற்று அருகில் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அதிக மழை இருக்கும். இந்த மழை ஓரிரு நாள்களுக்கு தொடரும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தால் தொடர்ந்து மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


0 comment(s) to... “தமிழகத்தில் மழை பெய்யும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை”