முத்துப்பேட்டை அருகே கறிக்கடை ஊழியர் தூக்குபோட்டு சாவு

Posted December 04, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த பேட்டை மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் பழனி (எ) பாஸ்கர்(38).இவருக்கு அந்தோணி அம்மாள் என்ற மனைவியும், எஸ்தர், டென்னிஸ் ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.பழனி முத்துப்பேட்டையில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி குடித்து
விட்டு வந்து தகராறு செய்ததால் அந்தோணி அம்மாள் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
பல நாட்களாகியும் அவர் திரும்பி வராததால் விரக்தி அடைந்த பழனி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்துப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.நன்றி தமிழ்முரசு



0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே கறிக்கடை ஊழியர் தூக்குபோட்டு சாவு”