பவானி, ஆக.31-
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் மீரா (15). (பெயர் மாற் றம்). 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் வயிற்றுவலி ஏற்ப ட்டது. பவானி அரசு மருத்துவமனையில் சேர் க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது மீராவுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பது தெரிந்தது. சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மீரா பள்ளி மாணவி என்பதும், 15 வயதே ஆகி றது என்பதையறிந்த மருத்துவர்கள், செவி லியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவி யிடம் விவரம் கேட்டபோது, ‘10 மாதங்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பவர் தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாகவும், தற்போது அவர் எங்கு ள்ளார்? என்பது தெரியவி ல்லை’ என்றும் கூறினார். இதுகுறித்து, பவானி அனை த்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மகளிர் போலீசார் விசா ரணை நடத்தினர். இதில் பவானியில் கரும்புச்சாறு விற்பனை செய்து வந்த விஜய்க்கு திருமணமாகி, மனைவி கர்ப்பிணியாக உள்ளதும், மாணவியின் வீட்டு பக்கத்தில் அவர் கள் வசித்து வந்ததும் தெரிந்தது. மீராவின் தாய் நெசவு வேலைக்கு சென்று விடுவார். அப்பா வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார். இதனால் மீரா சரியான கவனிப்பு இல்லாமல் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி, விஜய் அத்துமீறியது தெரியவந்தது. மீரா தனக்கு பிரசவ வலி ஏற்படும் நாள் வரையில் பள்ளிக்குச் சென்று வந்துள் ளார். வயிறு பெரியதாக தெரியாததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சமீபத்தில் விஜய் வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டார். அவர் சொந்த ஊரான பட்டுக்கோட்டை சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது தாயும், சேயும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.


okenakkal 1 திருமண நாளை கொண்டாட ஒகேனக்கல் சென்ற சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர், காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து பரிதாபமாக உயிர் இழந்தனர். 

திருமண நாளை கொண்டாட...

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகம், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து அருவியிலும், காவிரி கரையோரத்திலும் குளித்து பரிசலில் சென்று மகிழ்வார் கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). இவருடைய மனைவி கவுரி (55), இவர்களது மகன் ரஞ்சித் (35), இவருடைய மனைவி கோகிலா (30), இவர்களது மகள் சுதிஷா (10 மாதம்).

கிருஷ்ணமூர்த்தியின் மகள் கோமதி (29), இவருடைய கணவர் ராஜேஷ் (30), செல்போன் கடை உரிமையாளர். இவர்களது மகன்கள் சச்சின் (6லு), தர்சன் (2லு). நேற்று கோமதியின் திருமண நாள் ஆகும். இதைக் கொண்டாட அவர்கள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

பரிசலில் பயணம்

அதன்படி, கிருஷ்ணமூர்த்தி உள்பட 9 பேரும் சென்னையில் இருந்து ரெயில் மூலம் தர்மபுரி வந்து, அங்கிருந்து பஸ்சில் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், ஒகேனக்கல்லில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இதையடுத்து பரிசலில் சென்று காவிரி ஆற்றை ரசிக்க முடிவு செய்தனர்.

இதற்காக ஒகேனக்கல்லில் உள்ள மாமரத்துக்கடவு பரிசல் துறைக்கு சென்று ஒரு பரிசலில் ஏறினர். அந்த பரிசலை கஜாமுருகேசன் (50) என்பவர் ஓட்டிச்சென்றார். காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே சென்ற அந்த பரிசல் பெரிய பாணி பகுதியில் உள்ள தொம்பச்சிக்கல் என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தது.

10 பேரும் மூழ்கினர்

அப்போது நீர்ச்சுழலில் சிக்கிய பரிசலில் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பரிசல் ஓட்டி கஜாமுருகேசன் தண்ணீரை அள்ளி ஊற்றியபடி சென்றார். ஒரு கட்டத்தில் தண்ணீர் அதிகமாக வரவே பரிசல் திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் பரிசலில் சென்ற 10 பேரும் காவிரி ஆற்றில் விழுந்து மூழ்கினர்.

இதை பார்த்ததும் அருகே பரிசல்களில் வந்து கொண்டிருந்த பரிசல் ஓட்டிகளான ஆனந்தன், சிவலிங்கம் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ஆற்றுக்குள் குதித்து ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். 

இதில் ராஜேஷ், அவருடைய மனைவி கோமதி, இவர்களது மகன் சச்சின், பரிசல் ஓட்டி கஜாமுருகேசன் ஆகிய 4 பேரும் மீட்கப்பட்டனர். மற்ற 6 பேரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட 4 பேரும் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தேடும் பணி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பரிசல் ஓட்டிகள் உதவியுடன் தீயணைப்பு படையினரும், போலீசாரும் காவிரி ஆற்றில் சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

6 பேர் பலி

இதனிடையே போலீசார் சுமார் 1 மணி நேர தேடுதலுக்குப்பின் கவுரி, குழந்தை தர்சன் ஆகியோருடைய உடல்களை மீட்டனர். அவர்களின் உடல்கள் பரிசல் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித், கோகிலா, சுதிஷா ஆகிய 4 பேரை தேடும் பணி இரவு வரை நடைபெற்றது. இவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உயிருடன் மீட்கப்பட்ட ராஜேஷ், கோமதி, சிறுவன் சச்சின் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
okenakkal 2
news by dailythanthi

பட்டுக் கோட்டை,ஆக.31:
சாலை விதி களை பின் பற் றா த தால் நாட்டில் 6 நிமி டத் திற்கு ஒரு வர் பலி யா வ தாக சாலை பாது காப்பு விழிப் பு ணர்வு பிர சா ரத் தில் வலி யு றுத் தப் பட்டது.
பட்டுக் கோட்டை யில் சுற் றுச் சூ ழல் பாது காப்பு சங் கம் சார் பில் நேற்று சாலை பாது காப்பு விழிப் பு ணர்வு பிர சா ரம் நடை பெற் றது. பேருந் து நி லை யம் பகு தி யி லி ருந்து தொடங்கி பழ னி யப் பன் தெரு, மணிக் கூண்டு, பெரி ய தெரு, மார்க் கெட், பெரி ய க டைத் தெரு உள் ளிட்ட பகு தி களில் உள்ள பொது மக் கள் மற் றும் வர்த் த கர் களி டம் சாலை பாது காப்பு விழிப் பு ணர்வு துண்டு பிர சு ரங் கள் வழங் கப் பட்டது. இந்த நிகழ்ச் சி யில் சுற் றுச் சூ ழல் பாது காப்பு சங் கத் தலை வர் கந் த கல் யா ண சுந் த ரம், செய லா ளர் இன் ஜி னி யர் ராம லிங் கம், துணைத் தலை வர் வேணு கோ பால், துணை செய லா ளர் எம்.எம்.சுகு மார், உறுப் பி னர் கள் வக் கீல் பிர கா சம், காசாங் காடு செந் தில், ரோஜா சா குல் ஹமீது, ஈகா வைத் தி ய நா தன், அப் துல் ச லீம், மன் னங் காடு வெங் க டே சன், சிவ சாமி, லாசர் உள் பட ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர். இது குறித்து சுற் றுச் சூ ழல் பாது காப்பு சங்க செய லா ளர் இன் ஜி னி யர் ராம லிங் கம் கூறு கை யில், தின மும் ஆயி ரக் க ணக் கான மோட்டார் வாக னங் கள் புதி தாக சாலை களில் போக் கு வ ரத்து பயன் பாட்டுக்கு கொண்டு வரப் ப டு கி றது. ஆனால் இந்த எண் ணிக் கை யி லான வாக னங் களுக்கு ஏற் றாற் போல் சாலை கள் விரி வாக் கம் செய் யப் ப ட வில்லை. இருக் கும் சாலை யி லும் வாகன ஓட்டி களி டம் சாலை விதி கள் குறித்த விழிப் பு ணர்வு இல்லை. இதன் கார ண மாக தின மும் எண் ணற்ற சாலை விபத் துக் கள் நடை பெ று கி றது. புள்ளி விப ரப் படி நாட்டில் 6 நிமி டத் திற்கு ஒரு வர் சாலை விபத் தின் மூலம் உயி ரி ழக் கி றார். இதற்கு முறை யாக சாலை விதி களை பின் பற் றா ததே கார ணம். விலை மதிப் பற்ற மனித உயிர் கள் பறிக் கப் ப டு வதை தடுக் கும் வகை யில் நகர் முழு வ தும் துண்டு பிர சு ரங் களை மக் களி டம் வழங்கி விழிப் பு ணர்வை ஏற் ப டுத்தி வரு கி றோம் என் றார்.

தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் அரு கே யுள்ள சோலைக் காட்டை சேர்ந் த வர் சந் தி ரன். விவ சாய கூலித் தொ ழி லாளி. இவ ரது மனைவி ராஜேஸ் வரி (45). இவர் கள் அரு கே யுள்ள ஆல டிக் காடு என்ற இடத் தில் ஜமால் என் ப வ ருக்கு சொந் த மான தென் னந் தோப் பில் பல ஆண் டு க ளாக குடி யி ருந்து வரு கின் ற னர்.
நேற்று முன் தி னம் இரவு 7 மணி ய ள வில் சந் தி ரன் அரு கே யுள்ள கடைக்கு மளிகை பொருள் வாங்க சென் றார். அப் போது வைக் கோல் போர் அருகே கிடந்த பாம்பு ராஜேஸ் வ ரியை கடித் தது. அவரை தஞ்சை மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று அதி காலை ராஜேஸ் வரி இறந் தார். இது குறித்து போலீ சார் விசா ரிக்கின் ற னர்.

அதி ராம் பட்டி னம்  அருகே அரசு அதி கா ரி களை சிறை பி டித்த மக் க ளால் பர ப ரப்பு ஏற் பட்டது.
 அதி ராம் பட்டி னம்  அருகே , மாளி யக் காடு ஊராட் சி யில் தமி ழக அர சின் விலை யில்லா கறவை பசுக் கள் வழங் கு வ தற்கு கிரா ம சபை கூட்டம் மூலம் 47 பய னா ளி கள் தேர்வு செய் யப் பட்ட னர். அவர் கள் நேற்று கர் நா டகா மாநி லத் திற்கு அழைத் துச் செல் லப் பட்டு பசுக் கள் கொள் மு தல் செய்து வழங்க திட்ட மி டப் பட்டி ருந் தது.
அதற் காக நேற்று மதி யம் 1 மணி முதலே மாளி யக் காடு ஊராட்சி மன் றத் தில் பய னா ளி களும், பொது மக் களும் திரண் டி ருந் த னர். அப் போது அங்கு வந்த தஞ்சை மண் டல கால் நடை பரா ம ரிப் புத் துறை இணை இயக் கு நர் செல் வ வி நா ய கம், உதவி இயக் கு நர் ராஜேந் தி ரன் மற் றும் அதி கா ரி கள் இன்று (நேற்று) அழைத்து செல் ல வில்லை என்று கூறி னர். இத னால் ஆத் தி ர ம டைந்த பய னா ளி கள் மற் றும் உற வி னர் கள், கிராம பொது மக் களு டன் சேர்ந்து சுமார் 500 பேர் அந்த அரசு அதி கா ரி களை சிறை பி டித்து போராட்டம் நடத் தி னர்.
உடனே அங்கு வந்த அதி ராம் பட்டி னம் போலீ சார் கிராம பொது மக் களு டன் சமா தான பேச்சு வார்த்தை நடத் தி னர். அப் போது பய னா ளி கள் மற் றும் பொது மக் கள் எங் களுக்கு எப் போது கறவை பசுக் கள் வழங் கப் ப டும் என்று அதி கா ரி கள் எழுதி கொடுக்க வேண் டும் என்று கூறி னர். உடனே அங்கு வந் தி ருந்த அதி கா ரி கள் உய ர தி கா ரி களி டம் பேசி னர். அதன் பிறகு நாளை (31ம் தேதி) கர் நா டகா மாநி லத் திற்கு தேர்வு செய் யப் பட்ட பய னா ளி கள் 47 பேரை அழைத் துச் சென்று கறவை பசுக் கள் கொள் மு தல் செய்து தரு வ தாக எழு திக் கொடுத் த னர். அதனை தொடர்ந்து பய னா ளி கள் மற் றும் பொது மக் கள் அதி கா ரி களை விடு வித்து போராட்டத்தை கைவிட்ட னர்.

தஞ்சை, ஆக.30-
திமுக பேரா வூ ரணி ஒன் றிய செய லா ள ராக என்.எஸ்.சேகர், திரு வை யாறு ஒன் றிய செய லா ள ராக கவு த மன் ஆகி யோர் நிய மிக் கப் பட்டுள் ள னர்.
ஏற் க னவே இப் பொ றுப் பில் இருந்த பேரா வூ ரணி என்.செல் வ ராசு மாவட்ட துணை செய லா ள ராக தேர்ந் தெ டுக் கப் பட்ட தை ய டுத்து ஒரு வ ருக்கு ஒரு பொறுப்பு என் ப தன் அடிப் ப டை யில் தன் னு டைய பேரா வூ ரணி ஒன் றிய செய லா ளர் பொறுப் பி லி ருந்து விடு வித்து கொண் டார். இதை ய டுத்து சேகர் ஒன் றிய செய லா ள ராக நிய மிக் கப் பட்டுள் ளார்.
இதே போல் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செய லா ள ராக துரை.சந் தி ர சே க ரன் தேர்ந் தெ டுக் கப் பட்ட தை ய டுத்து அவர் வகித்து வந்த திரு வை யாறு ஒன் றிய செய லா ளர் பொறுப் பி லி ருந்து விடு வித்து கொண் டார். இதை ய டுத்து திரு வை யாறு ஒன் றிய செய லா ள ராக கே.எம்.கவு த மனை நிய மித்து திமுக பொதுச் செய லா ளர் க.அன் ப ழ கன் அறி விப்பு வெளி யிட்டுள் ளார்.

வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய முக்கிய அம்சங்கள்!
இன்றைய காலக்கட்ட‍த்தில் பலர் வேலை, படிப்பின் காரணமாக வெளியூ ரில் வசிப்பவர்கள், சொந்த வீடு வாங்க முடியாதவர்கள், இப்படி பலதரப்ப ட்ட‍ காரணங்களினால்
வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய சூழ் நிலையில் தள்ள‍ப்படுகிறார்கள். இந்த‌ வாடகைக்கு வீடு எடுக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
1.வாடகைக்கு வீடு எடுக்கும்போது அதற்கு வாட கை ஒப்ப‍ந்தப் பத்திரத்தை போடுவது முக்கியம். அதில் வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகை தாரர் ஆகிய இருவரது பெயர்கள், வயது, தந்தை பெயர் ஆகியவை கண்டிப்பாக இருக்க‍ வேண்டு ம். மேலும் வீட்டின்உரிமையாளரது நிரந்தரவீட்டு விலாசம், வாடகை தாரர் தனது நிரந்ரத வீட்டு விலாசத்தையோ (அல்) ஏற்கெனவே குடியிருந்த வீட்டின்விலாசத்தையும் தவறாமல் குறிப்பிடவேண்டும். அது மட்டுமல்ல, வாடகைவீடு எங்கிருக்கிறதோ அந்த வீட்டின் விலாசத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும்.
2. மாத வாடகை தொகை எவ்வளவு, முன்தொகை தொகை எவ்வளவு, வாடகை ஒப்ப‍ந்தகாலம் எத்த‍ னை மாதங்கள் அல்ல‍து எத்த‍னை வருடங்கள் என்பதை குறிப்பிட வேண்டும். மாத வாடகையை போல 10 மடங்கு தொ கை மன்தொகை வீட்டு உரிமையாளரால் வசூலிக்க முடியும். மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்கிறீர்கள் எனில் ரூ.1 லட்சம் முன்தொகை கொடுக்கவேண்டியிருக்கும். இந்த தொகைக்கு வட்டி எக்காரணம் கொண்டும் கணக்கிடப்பட மாட்டாது. மேலும்  இந்த முன்தொகை, வீட்டின் உரிமையாளரை பொறுத்துமாறும். பெரும்பா லும் முன்தொகை அதிகமாக இருக்கும். அதை ஒப்ப‍ந்தத்தில்குறிப்பிடுவது நல்லது. ஏனெனில் எதாவது பிரச்சனை வரும்போது பணத்தை திரும்ப பெற இது உதவியாக இருக்கும். மேலும் எவ்வளவு நாளைக்கு ஒப்பந்தம் செல்லுபடி ஆகும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதே போல தொடர்ந்து வாடகை ஒப்ப‍ந்தத்தை புதுப்பிப்பது அவசியம்.
அல்ல‍து குத்த‍கைக்குகூட சில வீட்டு உரிமை யளார்கள் விடுகிறார். அதாவது ஒரு பெரிய தொகையை வீட்டுஉரிமையாளர், குத்த‍கைதா ரரிடம் வசூலிப்பார். அத்தொகையை வங்கியில் அவரது பெயருக்கு டிபாசிட்செய்து அதில்வரும் வட்டியை வாடகைதொகையாக கருதப்பட்டு வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொள்வார். அதா வது ஒரு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு குத்தகை தொகையாக சுமார் 4 முதல் 6லட்சம்வரை இருக்கும் 2 படுக்கைய றைகள் கொண்ட வீட்டுக்கு குத்த‍கை தொகை யாக ரூ.6 to 10 இலட்சம்வரை இருக்கும். 3 படுக் கையறைகள் கொண்ட வீட்டுக்கு குத்த‍கை தொகையாக ரூ.10 முதல் 15 இலட்சம் வரை இருக்கும். மேலும் வீட்டின் சதுரடியை பொறுத்து குத்த‍கை தொகை வீட்டு உரிமையாளர்களால் நிர்ணயி க்க‍ப்படும்.
3.குடியிருக்கும் வீட்டில் டியூசன் எடுக்க கூடாது , வீட்டிலே சின்னதாக எதாவது தொழில்செய்யக்கூடாது, சுவரில்ஆணி அடிக்கக்கூடாது, மாடியில் செடி வைக்கக்கூடாது சில வீட்டு உரிமையாளர்கள்  சொல்வர்கள். இதையும் முன்கூட்டியே தெரிந்துவைத்துக்கொண்டால் பல பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

4.கூடுதலாக எதற்கெல்லாம் பணம் கொடுக்கவேண்டும் என்பதை பார்க்கவேண்டும். வாடகை போர்ஷனுக்கு உண் டான மின் கட்ட‍ணத்தை நேரடியாக மின்வாரிய அலுவலக த்திலேயே செலுத்திக்கொள்ள‍ சில வீட்டு உரிமையாளர்  அனுமதிப்பார்கள். ஆனால்  சில வீடுகளில் வீட்டு உரிமை யாளர்களே மின் வாரிய அனுமதியுடன் சப் மீட்ட‍ர் பொருத் தியிருப்ப‍ர் அந்த மீட்ட‍ர் காட்டும் மின்கட்டணம் சில இடங்களில் நியாய மாக இருக்கும் பல இடங்களில் அதிகமாக வசூலிப்பார்கள். அதாவது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக ஒரு யூனிட்டுக்கு ரூ.5,6 என வசூலிப்பார்கள். மேலும் தண்ணீருக்கு தனியாக, கழிவுநீர் வெளியே எடுப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் கேட் பார்கள். இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
5.வாடகைக்கு வீடு, வாடகைதாரர் எடுக்கும்போது, அந்த வீடு நல்ல நிலையில் இருந்ததோ அதே நிலையில் வீட்டை பராமரித்து வரவேண் டும். மீறிவாடகைக்குபோகும் வீட்டில்உள்ள சிலபொருட்கள் சேதம் அடை ந்தால் அல்லது பழுதடைந்தால் அதற்கு வாடகை தாரரே முழு பொறுப்பு ஆவார். பழுதை சரிசெய்து அதற்கான தொகையை வீட்டு உரிமையாளர்  வாடகைதாரரிடம் இருந்து வசூலிப்பார். அல்ல‍து  அந்த பழுதை  வாடகைதாரரையே சரிசெய்ய சொல் வார். அதாவது தண்ணீர் பைப் உடைவது, ஜன்னல் கண்ணாடி, வீடு தரையில் உள்ள டைல்ஸில் ஏதாவது கீறல் விழும்போது வாடகைதாரரே அவற்றை சரி செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டிய தெரிந்துகொண்டால், நல்ல‍து.  சில வீடுகளில் பேன், ஏசி, லைட் ஆகியவற்றை வீட்டின் உரிமையாளரே போட்டு வைத்திருப்பார். இவைகள் பழுதானாலும் அவற்றையும் வாடகைதாரரே சரி செய்ய வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும்.
6. வாடகைக்கு எடுத்த‍ வீட்டை நீங்கள் காலிசெய்வதாக இருந்தால், அவ் வீட்டின் உரிமையாளர், வாடகை வீட்டைவந்து பார்வையிடுவார். அவ் வீட்டில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தாலோ அல்ல‍து ஏதேனும் மின்பாக் கி வைத்திருந்தாலோ அல்ல‍து உடைத்திருந்தாலோ அத் தொகையை வாடகைதார‌ர் கொடுத்த‍ முன்தொகையில் இருந்து கழித்துக்கொண்டு மீதித்தொகையை கொடுப்பார். அதனை வாடகைதாரரான நீங்கள்பெற்றுக் கொள்ள வேண் டும்.
7.நோட்டீஸ் பிரீயட் எவ்வளவு நாட்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். வீடு காலிசெய்வதை எவ்வளவு நாளை க்கு முன் தெரிவிக்க வேண்டும் என்பதையும்,அந்த சமயத்தில் எதாவது கூடுதல் கட்டணம் (வீட்டில் சுண்ணாம்பு அடிப்பதற்கு) உள்ளதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
8.வாடகைஒப்பந்தப்பத்திரம் தயாரித்த‍பின் பத்திரத்தை படித்த‍பிறகு முடிவில் எல்லாப் பக்க‍ங்களிலும் இடது பக்க‍ம் வீட்டு உரிமையாளரும், வலது பக்க‍த்தில் வீட்டு வாடகைதாரரும் மறக்காமல் கையொப்ப‍ம் இடவேண்டு ம். மேலும் சாட்சிகள் இருவர் கையொப்ப‍ம் இடவேண்டு ம். முதல் சாட்சி, வீட்டு உரிமையாளரது உறவினரோ அல்ல‍து நண்பர் களோ அல்ல‍து தெரிந்தவர்களோ கையொப்ப‍ம் இட வேண்டும். இரண்டாவது சாட்சி வாடகைதாரரது உறவினரோ அல்ல‍து நண்பர்களோ அல்ல‍து தெரிந் தவர்களோ கையொப்ப‍ம் இடவேண்டும். சாட்சிகள் கையொப்ப‍ம் இடும்போது, கையொப்ப‍ம், பெயர், வயது மற்றும் வீட்டு விலாசம் ஆகியவற்றை தவறா மல் குறிப்படவேண்டும்.
9. எல்லாவற்றுக்கும் மேலாக வாடகைதாரர், வீட்டு உரிமையாளரை பற்றி அக்க‍ம்பக்க‍த்தில் உள்ள‍வர்க ளிடம் விசாரித்து அவரை பற்றி தெரிந்து கொள்ள‍ வேண்டும். அதேபோல் வீட்டுஉரிமையாளர், வாட கைதாரர் ஏற்கெனவே குடியிருந்த வீட்டிற்கு சிரமம் பாராமல் சென்று அவரைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள‍ வேண்டும். இதனால் பல பிரச்சனைகள் தவிர்க்க‍ப்படும்.

சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர்– பாலு (காவேரி லைன், நியூகாலனி, தருமபுரி), துணைத் தலைவர்கள்– ஷர்மிளா வினோத்குமார் (சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம்), அன்பு செழியன் (விருகம்பாக்கம்), இணைச்செயலாளர்கள்– பிரசன்ன அழகர்சாமி (போரூர்), ராஜ்மோகன் (ஸ்ரீவில்லிபுத்தூர்), கார்த்திகேயன் (அம்பத்தூர்), ராமச்சந்திரன் (கோவை), துணைச் செயலாளர்கள்– திருமலவாசன் (கே.கே.நகர் சென்னை), பிரசாத் (திருவல்லிக்கேணி), சண்முகவேல் (சங்கரன்கோவில்), பாலமுருகன் (புரசைவாக்கம்), கார்த்திக் (விருகம்பாக்கம்), பொருளாளர்– தர்மேஷ் குமார் (திருத்தணி) கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார், .

முத் துப் பேட்டை அருகே இறந் த வ ருக்கு உத வித் தொகை தந் த தாக மோசடி செய்த தபால் கா ரர் சஸ் பெண்ட் செய் யப் பட்டார்.
திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பேட்டை அருகே உள்ள அம் ம லூர் தெற்கு தெருவை சேர்ந் த வர் வேல் மு ரு கன். மாற் றுத் தி ற னா ளி யான இவர் அரசு உத வித் தொகை யாக மாதம் ரூ. 1000 வீதம் எடை யூர் அஞ் சல் நிலை யம் மூலம் பெற்று வந் தார். இந் நி லை யில் கடந்த 2013 மார்ச் 20ம் தேதி வேல் மு ரு கன் இறந் தார். ஆனால் அவ ரது பெய ரில் மாதந் தோ றும் உத வித் தொகை பெறப் பட்டு வந் தது.
இந் நி லை யில் இந்த மாதம் உத வித் தொகை அனுப் பும் வங்கி மூலம் நடத் தப் பட்ட ஆய் வில், 28 மாத மாக வேல் மு ரு கன் பெய ரில் உத வித் தொகை பெறப் பட்டுள் ள தும், எடை யூர் தபால் அலு வ லக போஸ்ட் மேன் குமார் மூலம் அதே அலு வ ல கத் தில் தற் கா லிக பணி யா ள ராக பணி புரி யும் கண் ணன் என் ப வர் மோச டி யில் ஈடு பட்ட தும் தெரி ய வந் தது. இது பற்றி தின க ர னில் செய்தி வெளி யா னது. இத னை ய டுத்து தற் கா லிக பணி யா ளர் கண் ணன் உட ன டி யாக அலு வ ல கத் தி லி ருந்து வெளி யேற் றப் பட்டார். இந்த மோசடி சம் ப வம் தொடர் பாக போஸ்ட் மேன் குமார் மீது நட வ டிக்கை எடுக்க அதி கா ரி கள் அஞ் சல் துறைக்கு பரிந் துரை செய் த னர். இதை ய டுத்து அதி கா ரி கள் நேற்று முன் தி னம் போஸ்ட் மேன் குமாரை இடைக் கால பணி நீக் கம் செய்து, அவ ரி ட மி ருந்து மோசடி செய்த தொகையை பறி மு தல் செய் த னர். பின் னர் சர வ ணன் என் ப வரை அப் ப குதி நிரந் தர போஸ்ட் மே னாக அஞ் சல் துறை நிய ம னம் செய் தது.
மேலும் இந்த மோசடி சம் ப வம் போல் நடை பெ றக் கூ டாது என் ப தற் காக நேற்று மாலை திருத் து றைப் பூண்டி தாசில் தார் அலு வ ல கத் தில் வரு வாய் துறை அதி கா ரி கள் சிறப்பு கூட்டம் தாசில் தார் யமுனா ராணி தலை மை யில் நடை பெற் றது. இதில் ஆர் ஐக் கள்,விஏ ஓ வி னர் உள் ளிட்ட வரு வாய் துறை அதி கா ரி கள் கலந்து கொண் ட னர். இனி இது போல் சம் ப வம் நடை பெ றா மல் இருக்க அனைத்து உத வித் தொகை பெறும் பய னா ளி களை நேரில் ஆய்வு செய்து பட்டி யல் சரி பார்க்க வேண் டும் என்று அவர் களுக்கு உத் த ர வி டப் பட்டது.

முத் துப் பேட்டை, ஆக. 30:
முத் துப் பேட்டை அருகே அர சின் உத வித் தொகை கிடைக் கா மல் உயி ருக்கு போரா டும் மாற் றுத் தி ற னாளி மகனை பரா ம ரிக்க முடி யா மல் வய தான தாய் தவித்து வரு கி றார்.
திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பேட்டை அருகே உள்ள மேல நம் மங் கு றிச்சி கிரா மத்தை சேர்ந் த வர் கள் ரெத் தி னம்- வடு வம் மாள் தம் பதி. இவர் க ளது மகன் பால கி ருஷ் ணன்(27). இவர் 4 வய தில் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக் கப் பட்டு கை, கால் கள் செயல் இழந் தார். அவ ரால் பேசவோ, எந்த வேலை யும் செய் யவோ முடி யாது.
இந் நி லை யில் தந் தையை இழந்த அவரை தாய் வடு வம் மாள் பரா ம ரித்து வரு கி றார். பால கி ருஷ் ண னுக்கு அர சின் உத வித் தொகை வேண்டி வடு வம் மாள் 20 வரு டங் களுக்கு மேலாக கலெக் டர், தாசில் தார் மற் றும் ஆர் டிஓ அலு வ ல கங் களுக்கு பால கி ருஷ் ண னனை தூக் கிக் கொண்டு சென்று மனு அளித்து போரா டி யும் இது வரை எந்த நட வ டிக் கை யும் இல்லை.
இத னால் பால கி ருஷ் ண னின் பரா ம ரிப்பு மற் றும் மருத் துவ செல வுக்கு பணம் இன்றி வடு வம் மாள் தவித்து வரு கி றார். தற் போது பால கி ருஷ் ண னுக்கு உடல் நிலை மிக வும் மோச ம டைந் துள் ளது. அதற்கு கூட மருத் துவ சிகிச்சை அளிக்க கூட முடி யாத நிலை உள் ளது.
இது குறித்து வடு வம் மாள் கூறு கை யில், அவன் பிறந்த நாளி லி ருந்து நான் அவனை விட்டு பிரிந் ததே இல்லை. என் மக னுக்கு உத வித் தொகைக் காக நான் பார்க் காத அதி கா ரி களே இல்லை. எந்த அதி கா ரி யும் உதவி செய்ய முன் வ ர வில்லை. அலைந்து சோர்ந்து போய் விட்டேன் என்று கண் கலங் கி னார்.
இது குறித்து விசி கட்சி நிர் வா கி கள் மீனாட்சி சுந் த ரம், மகா லிங் கம் கூறு கை யில், அரசு இந்த இளை ஞ ருக்கு உதவி செய் யா தது வருத் தம் அளிக் கி றது. விரை வில் இந்த இளை ஞ ருக்கு அர சின் உதவி வேண்டி போராட்டம் நடத்த இருக் கி றோம் என் ற னர்.

முத் துப் பேட்டை அடுத்த வட சங் கேந் தி யில் அதி க ள வில் மயில் கள் நட மாட்டம் உள் ளது. இதனை அப் ப கு தி யைச் சேர்ந் த வர் கள் வேட்டை யாடி வரு கின் ற னர். மேலும் வயல் களில் தொந் த ரவு கொடுக் கும் மயில் களை கல் லால் தாக் கி யும் வரு கின் ற னர். இதை தடுக்க வனத் து றை யி னர் தீவிர ரோந்து பணி யில் ஈடுப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் நேற்று வட சங் கேந்தி கும ர வேல் என் ப வ ரது வீட்டு அருகே மயில் ஒன்று காயத் து டன் உயி ருக்கு போராடி கொண் டி ருந் தது. வனத் து றைக்கு தக வல் தொிவிக் கப் பட்டது. அங்கு வந்த வனத் துறை அலு வ லர் கள் உயி ருக்கு போரா டிய மயிலை மீட்டு சிகிச் சைக் காக எடுத்து சென் ற னர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட3 வது வார்டைச் சோர்ந்த பகுதி சுப்பரமணியர் கோவில் தெரு இந்தப்பகுதியில் மின் கம்பத்தில் சென்ற  கம்பிகளில் ஒரு கம்பி திடீரென அறுந்து சாலையில் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது வீடுகள் மீது மின் கம்பி விழவில்லை. மேலும் மதியம் நேரம் என்பதால் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து 3 வது வார்டைச் சோர்ந்த கவுன்சிலர் சிவக்குமார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதைதொடர்ந்து மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பி அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிராம்பட்டினம் பகுதியில் பெரும்பாலான மின் கம்பங்களில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டு இருக்கிறது. மேலும் மின் கம்பங்களும் பழுதடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பல முறை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று மதியம் மின் கம்பத்தில் இருந்து ஒரு கம்பி அறுந்து கீழே விழுந்து விட்டது. அப்போது அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  என்று கூறினர்.



அதிராம்பட்டினம் மன்னப்பங்குளம் வினாயகப்பெருமான் ஆலயத்தில் இன்று ஆவணி அவிட்டம் பூனூல் புதிதாக அணியும் வைபவம் நடைபெற்றது இதனையடுத்து காலையில் கணபதி ஹோமம் யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.   இதில் ; 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் புதிதாக பூனூல் அணிந்தனர் இந்த ஏற்பாட்டினை விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது 














பேராவூரணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மது ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
     பேராவூரணி புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆதனூர் தேரடி திடல் ஆகிய இடங்களில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பெ.ஜான் பாண்டியன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்து மதுவிலக்கின் அவசியம் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் குருமூர்த்தி, மாவட்ட செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
        பேராவூரணி ஒன்றியச் செயலாளர் எஸ்.மரிய சவரிநாதன், நகரச்செயலாளர் எஃப்.ஆசிர்வாதம், நகர இளைஞர் அணி தலைவர் வி.எம்.ஜே.யோசுவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

           பெ.ஜான் பாண்டியன் வருகையையொட்டி நகரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


NASA-logo 0
நியூயார்க - பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த 100 ஆண்டுகளில் பூமியில் உள்ள கடல் நீர்மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என நாசா ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையாக பருவநிலை மாற்றம் உள்ளது. காடுகளை அழித்து இயற்கையை சீர்குலைக்கும் மனிதர்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 100 அல்லது 200 ஆண்டுகளில் பூமியில் உள்ள கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என நாசா ஆய்வு கூறுகின்றது.
மேலும், இந்த கடல் மட்ட உயர்வு தடுக்க முடியாதது என்றும், அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியரும், இந்த ஆய்வுக்குத் தலைவராகவும் விளங்கும் ஸ்டீவ் நெரெம் கூறுகையில், "கடலில் வெப்பம் அதிகரிப்பதாலும், பனிப் பாறைகள் உருகி கடலில் கலப்பதாலும் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடியாக அல்லது அதற்கும் மேலாக உயரலாம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நிகழுமா அல்லது சிறிது காலம் கழித்து நிகழுமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்

விஜ ய காந்த் பிறந்த நாளை யொட்டி பட்டுக் கோட்டை நகர தேமு திக சார் பில் தொடக் கப் பள் ளி களில் படிக் கும் 250 மாணவ, மாண வி களுக்கு இல வச நோட்டு, சிலேட்டு, பேனா, பென் சில் மற் றும் இனிப்பு வழங் கும் நிகழ்ச்சி நடந் தது. தஞ்சை தெற்கு மாவட்ட செய லா ளர் ஜெயப் பி ர காஷ் தலைமை வகித் தார். மாவட்ட துணை செய லா ளர் பூபேஸ் கு மார், பட்டுக் கோட்டை நகர செய லா ளர் ராஜ ரெத் தி னம், நகர பொரு ளா ளர் அரு ணாச் ச லம் முன் னிலை வகித் த னர்.
நிகழ்ச் சி யில் முன் னாள் மாவட்ட செய லா ளர் டாக் டர் ராம நா தன் கலந்து கொண்டு 250 மாணவ, மாண வி களுக்கு இல வச நோட்டு, சிலேட்டு, பேனா, பென் சில் மற் றும் இனிப்பு வழங் கி னார். மாவட்ட நிர் வாகி செந் தில் கு மார், ஒன் றிய தலை வர் ராஜ துரை மற் றும் நிர் வா கி கள், நகர நிர் வா கி கள் சுப் பு ராஜ், பாஸ் கர், சூரி ய வர் மன், தன சே கர், நாடி முத்து, கண் ணன், செல் வம், அம ல ரூ பன் கலந்து கொண் ட னர்.
பாப நா சம்:
தேமு திக தலை வர் விஜ ய காந்த் பிறந்த நாளை யொட்டி பாப நா சம் தங்க முத்து மாரி யம் மன் கோயி லில் விசேஷ அபி ஷே கம் நடந் தது. இதை தொ டர்ந்து கோயில் தேவ ரா யன் பேட்டை உத விப் பெ றும் தொடக் கப் பள்ளி 120 மாண வர் களுக்கு நோட்டு, பேனா வழங் கப் பட்டது. அய் யம் பேட்டை ஊன முற் றோர் பள் ளி யில் மதிய உணவு வழங் கப் பட்டது. மாவட்ட செய லா ளர் டெல்லி சாமி நா தன், பொரு ளா ளர் அறி வ ழ கன், பேரூர் செய லர் பாப நா சம் சதீஷ், கண் ணன், ராஜ சே கர் பங் கேற் ற னர்.

மண மேல் குடி, ஆக. 29:
நடுக் க ட லில் விசைப் ப ட கில் மீன் பி டித் துக் கொண் டி ருந்த மீன வர் வலை யில் சிக் கிய 2 அடி உயர ராக் கெட் குண்டு சிக் கி ய தால் பர ப ரப்பு ஏற் பட்டது.
புதுக் கோட்டை மாவட்டம், மண மேல் குடி அடுத்த அய் யம் பட்டி னம் மீன வக் கிரா மத்தை சேர்ந்த 300 மீன வர் கள் 100க்கும் மேற் பட்ட நாட்டுப் பட கு களில் மீன் பி டிக்க கட லுக்கு நேற்று அதி காலை புறப் பட்டுச் சென் ற னர். இவர் களில் மணி கண் டன் (21) என் ப வ ரது நாட்டுப் பட கில் அவ ரும், கண் ணன் (19), பிர காஷ் (16) ஆகி யோ ரும் மீன் பி டித் துக் கொண் டி ருந் த னர். 5 நாட்டிக் கல் தொலை வில் இவர் கள் மீன் பி டித்த போது, இவர் க ளது வலை யில் ராக் கெட் குண்டு ஒன்று சிக் கி யது. இத னால் அதிர்ச் சி ய டைந்த அவர் கள் திருப் பு ன வா சல் கட லோர பாது காப்பு குழும போலீ சா ருக்கு தக வல் கொடுத் த னர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ் பெக் டர் கிருஷ் ண ரா ஜன், எஸ் ஐ கள் இன்ஸ் பெக் டர் கள் மருது, ரகு பதி ஆகி யோர் ராக் கெட் குண்டை கைப் பற்றி கரைக்கு கொண்டு வந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.


உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள்
இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டுக்கு எளிதா க இல்லை என்பதே
இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டுபோன்களை பாதுகாப்பாக வைத்திருக்க வில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள்அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு . தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளா கி, சீக்கிரத்திலேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை  பாதுகாப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்
ஸ்கிரீன் லாக்!
எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின்(PIN), பாஸ்வேர்டு என்றமூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.
இது மாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.
என்க்ரிப்ட் வசதி!
மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப் பட்டு விடும்.ஒவ்வொருமுறை போனை ஆன் செய் யும் போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்தமுடியும். இதனால் நம் போன் தொலை ந்து போனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!
செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்த தாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும் போதுandroid.com/devicemanager என்ற முகவரி க்குச் சென்று, 5 நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள்அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக் கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!
பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான  ESET சொல்லும்கணக்கின்படி, அலுவலகங்களில் வை- ஃபைமூலம் இணையத்தைப் பயன்படுத்துவதால், 30-40% வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன் படுத்துவதற்குமுன், அது எந்தளவுக்கு பாதுகாப் பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம்கேட் டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.
இதேபோல, பொதுஇடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாய ம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
முக்கியமான தகவல்கள் பத்திரம்!
உங்களுக்கு மிகமுக்கியமானதாகத்தோன்றும் எத்தகவ லை யும் உங்கள்போனில் பதிவுசெய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவதுதவிர, போன்பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியு ம்.
நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!
குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன்தேவை, பாதுகாப்பு போன்ற வற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய் வதுநல்லது. குறிப்பாக, கூகுள்ப்ளே இல்லாமல் வேறுஎங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பான தில்லை.
அப்ளிகேஷன் லாக்!

முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளி கேஷன்களை எப்போதும் லாக்செய்து வைக் கலாம். இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளி கேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொரு முறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
ரூட் (Root) செய்ய வேண்டாம்!
போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவது போல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங்சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல் வேறு வசதிகள் கிடைக்கும். ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும் வசதி யைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளி கேஷன்மூலம் நமதுதனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
பிரவுஸர்கள் எச்சரிக்கை!
போனில்பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொ டுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரி யை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.
அதேபோல, பணப்பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.
அப்டேட் அவசியம்!
போனின்சாஃப்ட்வேரை புதியவெர்சனுக்கு அப்டேட்செய்துவைத்திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளி கேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும் போதெல்லாம் அதைச்செய்து கொள்ள வேண்டும்.
ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வே ண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம்கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.
போன் தொலைந்துவிட்டால்..?
இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள்போன் தொலைந்து போய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜி மெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்று வது.
அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வது தான். ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்ற லாமே!
=> பிரபு கிருஷ்ணா, தொழில் நுட்ப வல்லுநர்