அதிரையில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து

Posted December 02, 2014 by Adiraivanavil in Labels:
அதிரையில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள் ளது.


அதிரையில் பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன.

 பஸ்நிலையங்கள் மெயின்ரோடு சந்தை போன்ற பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்ட மாக திரிகின்றன

. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்கலமாக இருப்பதால் ஏராளமான மாடுகள் சாலைகளில் படுத்து ஓய்வெடுக்கின்றன.

மாடுகள் குறுக்கும் நெடுக்கும்
உலாவுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக் கடி விபத்துகளும் நடக்கிறது.

இருசக்கர வாகனங்களில் மாலையில் வரும் வியாபாரிகள் மாடுகள் மீது மோதி காயமடைவது தொடர்கதையாக உள்ளது.

இரவு நேரங்களில் சாலையில் படுத்து கிடக்கும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் மோதி மாடுகள் இறக்கின்றன.

எனவே மாடுகளை வளர்ப்போர் அதனை சாலையில் திரிய விடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும், அவ் வாறு திரியும் மாடுகளை பவுண்டில் அடைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 










0 comment(s) to... “அதிரையில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து”