அதிரையில் ஒரு வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கும்
Posted March 12, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
இப்போது பாத்திகளில் கடல்நீரை பாய்ச்சும் பணிகள்துவங்கியுள்ளது. எனவே இன்னும் 7 தினங்களுக்குள் உப்பு உற்பத்தி துவங்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் கூறுகையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அனை த்து உப்பளங்களிலும் முதல்கட்டப் பணிகள் முடிந்து கடல்நீரை பாத்திகளில் நிரப்பும் பணிகள் நடை பெற்று வருகிறது. அடுத்த வாரம் பொன் உப்பு (ஒவ்வொரு சீசனிலும் முதன் முதலில் வாரப்படும் உப்பு) வாரும் பணி நடைபெறும் என்றார்.
0 comment(s) to... “அதிரையில் ஒரு வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கும்”