அதிரையில் ஒரு வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கும்

Posted March 12, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் ஏரிப்புறக் கரை கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய பகுதியில் கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில்
உப்பளங்கள் உள்ளன.மழை முடிந்ததும் கடந்த ஜனவரியில் இருந்து உப்பு உற்பத்தி செய்வதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியது. பாத்தி சீரமைத்தல், வரப்பு போடுதல், வாய்க்கால் வெட்டுதல், பாத்தி மிதித்தல், பாத்தியில் கட்டை போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டு பாத்திகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இப்போது பாத்திகளில் கடல்நீரை பாய்ச்சும் பணிகள்துவங்கியுள்ளது. எனவே இன்னும் 7 தினங்களுக்குள் உப்பு உற்பத்தி துவங்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் கூறுகையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அனை த்து உப்பளங்களிலும் முதல்கட்டப் பணிகள் முடிந்து கடல்நீரை பாத்திகளில் நிரப்பும் பணிகள் நடை பெற்று வருகிறது. அடுத்த வாரம் பொன் உப்பு (ஒவ்வொரு சீசனிலும் முதன் முதலில் வாரப்படும் உப்பு) வாரும் பணி நடைபெறும் என்றார்.


0 comment(s) to... “அதிரையில் ஒரு வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கும்”