கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு. வீணாகும் குடிநீர்;. அசுத்தமாகி மீண்டும் குழாயிக்குள் செல்வதால் தொற்றுநோய்கள் பறவும் அபாயம்

Posted March 10, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு மக்களுக்கும் கொள்ளிடம்
கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விணியோகிக்கப்பட்டு வருகிறது. முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்திலிருந்து பம்பிங் செய்யப்பட்டு முத்துப்பேட்டைக்கு குடிநீர்; கொண்டு வரப்படுகிறது. பின்னர் அதனை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மிக பிரம்மாண்டமான சம்பில் சேகரிக்கப்பட்டு மோட்டார் மூலம் அருகில் உள்ள 5 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்கில் ஏற்றப்படுகிறது. அதே போன்று பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள 3 வட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர்; டேங்கிலும் ஏற்றப்பட்டு நகரில் இரு பகுதியாக பிரித்து மக்களுக்கு விணியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் பம்பிங் செய்யப்படும் நேரத்தைப் பொருத்து நகர மக்களுக்கு குடிநீர்; விணியோகிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையில் முத்துப்பேட்டைக்கு வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மெயின் பைப்பில் பல இடங்களில் முறையான பராமரிப்பு கிடையாததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் விரயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மெயின் ரோட்டில் உள்ள மெயின் லைன் வால்வுகள் உடைந்து பழுதடைந்த நிலையில் உள்ளதால் பம்பிங் செய்யும் பொழுது குடிநீர் இதன் வழியாக வெளியேறி தொட்டி நிரம்பி வழிந்து நகர் பகுதிக்கு வரவேண்டிய தினமும் பல்லாயிரம் கணக்கான லிட்டர் குடிநீர்; வீணாகி வருகிறது. இதனால் குடிநீர்; தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இந்த நிலையில் அந்த வால்வு தொட்டிலிருந்து வெளியேரும் குடிநீர் நாள் கணக்கில் தேங்கி கிடப்பதால் அசுத்தமான நிலையில் உள்ளதுடன் பலரும் தங்களது இயற்கை உபாதைகளை கழித்து விட்டு அதில் கழுவி வருவதால் சாக்கடை போன்று துற்நாற்றம் வீசுகிறது. பம்பிங் செய்யப்படாத நேரத்தில் மீண்டும் சுகாதாரமற்ற அந்த தண்ணீர் குழாயிக்குள் சென்று விடுவதால் குடிநீரில் கலந்து மக்களுக்கு செல்கிறது. இதன் மூலம் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும், குடிநீர் வடிக்கால் வாரியம் கவனத்திற்கும் எடுத்து சென்றும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலை தொடர்ந்து நடந்து வருவதால் எந்த நேரமும் இந்த குடிநீர் மூலம் மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் முக்கிய நிலையாக உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கூறுகையில் மக்களுக்கு அடிப்படை வசதியான சுகாதாரமான குடிநீரை வழங்குவது பேரூராட்சியின் கடமை. ஆனால் இங்கே குடிநீருக்கு பதில் மக்களுக்கு சாக்கடைநீரை பேரூராட்சி நிர்வாகம் விணியோகித்து வருகிறது. மக்களுக்கு பாதிப்பு என்று வந்தால் அதற்கு முழுக்க முழுக்க பேரூராட்சி நிர்வாகமே காரணமாகும். இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து சரிசெய்யவேண்டும். சுகாதார துறையும் இந்த விஷயத்தில் தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கிறேன் என்றார்.

 சமூக ஆர்வலர் முகம்மது மாலிக்.
படம் செய்தி:

நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை



0 comment(s) to... “கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு. வீணாகும் குடிநீர்;. அசுத்தமாகி மீண்டும் குழாயிக்குள் செல்வதால் தொற்றுநோய்கள் பறவும் அபாயம்”