முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் காசடிக் கொள்ளை பகுதியில் வெங்டேஷ்வரா
அரசு உதவி பெரும் துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கே 1 முதல் 5-ம் வகுப்பு வரை இருக்கிறது. இதில் 47 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத இந்த பள்ளி ஒரு பழுதடைந்த ஆஸ்பட்டாஸ் சீட் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பள்ளியின் விதிமுறைகளை மீறி வகுப்பறைகளில் அருகில் பணி நடக்கும் கட்டிடங்களுக்கு தேவையான சிமிண்ட் மற்றும் தேவையான பொருட்களும் மற்றும் தேவையற்றப் பொருட்களும் மாணவர்களுக்கு இடையூறாக வைத்துள்ளனர். இந்த நிலையில் வகுப்பறையிலேயே சமையல் எறிவாய்வு வைத்து சமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்து வகுப்பறைக்கு சென்ற போது தேவையற்ற நிலையில் இருந்த ஒரு மர பீரோவில் குடியிருந்த தேன் கூடு ஒன்றிலிருந்து தேனீக்கள் வெளியேறி மாணவர்களை துரத்தியது. இதனால் மாணவர்கள் அலறி அடித்து பள்ளியை விட்டு ஓடி வெளியேறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அன்பழகன், சோமு, குமரவேலு, பழனிவேல், முருகாணந்தம் மற்றும் பலர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகளை மீட்டு அவர்களை வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். பின்னர் தேனீக்களை விரட்டி அப்புறப்படுத்திய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அ10சிரியர்கள் முத்துப்பேட்டை தொடக்கக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை