அதிராம்பட்டினம்அருகே அம்மைநோய்க்கு 2 பேர் பலி

Posted March 20, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்அருகே உள்ள கழனிக்கோட்டையில் 50 குடும்பங்களைச்
சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த கலைவாணன் (35) என்பவர் கடந்த மாதம் 28 ம் தேதியும், முருகையன் மனைவி ராதா (42) கடந்த 16 ம் தேதியும் அம்மைநோய் தாக்கி இறந்தனர். கடந்த 2, 3 நாட்களாக இங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு மேலும் நோய் பரவாமல் இருக்க மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று தஞ்சை கலெக்டர் சுப்பையன் சேதுபாவாசத்திரத்தில் பெருமகளூர் பூலான்கொல்லை, ஊமத்தநாடு ஊராட்சி பெத்தனாட்சிவயல் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ்சந்திரபோஸ், பெருமகளூர் ஆரம்ப சுகாதா நிலைய மருத்துவ அலுவலர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் குருமூர்த்தி ஆகியோர் சென்றிருந்தனர்.


0 comment(s) to... “அதிராம்பட்டினம்அருகே அம்மைநோய்க்கு 2 பேர் பலி”