முத்துப்பேட்டை பகுதியில் அடிக்கடி மணல் கொள்ளைகள் தொடர்ந்து
நடைபெற்று வருவதால் முத்துப்பேட்டை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று நள்ளிரவில் நகரம் மற்றும் கிராம பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார.; அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் தஞ்சாவூரிலிருந்து அனுமதி இல்லாமல் திருத்துறைப்பூண்டி மணல் ஏற்றி சென்ற லாரியை மடக்கி பிடித்து பறிமுதல்செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை செய்தார். இதில் தஞ்சாவூர் அடுத்த ஈச்சங்கோட்டை கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான லாரி என்றும், இது பல நாட்களாக அனுமதி இல்லாமல் மணல் எடுத்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கலைமணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.