பேராவூரணி அருகே புதுப்பெண் கொலை? உறவினர்கள் மறியல்

Posted March 17, 2015 by Adiraivanavil in Labels:
பேரா வூரணி அடுத்த நாடாகட் டைச் சேர்ந்த பாலுச்சாமி மகன் ரமேஷ் (32).
தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர். இவருக்கும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் மகள் ஜெயராணிக்கும்(24) கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணமானது முதலே தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று ஜெயராணி தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட தாக ஜெயராணியின் பெற்றோர்களுக்கு நாடாகாட்டைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்தபோது ஜெயராணியின் உடல் தரையில் கிடந்ததாம். ரமேஷ் குடும்பத்தினர் தான் ஜெய ராணியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என ஜெயராணியின் உறவினர்கள் பேராவூரணி அண்ணா சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த ஆர்டிஓ அரங்கநாதன், ஏஎஸ்பி தீபாகானேகர், இன்ஸ்பெக்டர் அன்பழகன், தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் மறிய லில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. பேராவூ ரணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருமணம் ஆகி 1 மாதத்தில் இறந்ததால் ஆர்டிஓ அரங்கநாதன் விசாரணை செய்து வருகிறார்.
news by tamilmursu


0 comment(s) to... “பேராவூரணி அருகே புதுப்பெண் கொலை? உறவினர்கள் மறியல்”