மகன்கள் தகராறை தடுத்த தாய் பலி: போலீஸ் விசாரணை
Posted March 12, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
அருளானந்தத்திற்கு சொத்துக்கள் அதிகமாக உள்ளது. இதையடுத்து அந்த சொத்துக்களை பிரித்து கொள்வதில் அவரது இரு மகன்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதனைகண்ட அவரது தாய் அன்னம்மாள் அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து அன்னம்மாளை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதனை அவரது வீட்டின் அருகே குடியிருப்பவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் போலீசார் இறந்த அன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்வம் குறித்து லூர்துசாமி, அந்தோணிசாமி ஆகியோரிடம் எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comment(s) to... “ மகன்கள் தகராறை தடுத்த தாய் பலி: போலீஸ் விசாரணை”