அதிரைஅருகே தாய், மகள் மீது தாக்குதல் உறவினர்கள் மீது வழக்கு

Posted March 24, 2015 by Adiraivanavil in Labels:
அருகேஅதிராம்பட்டினம் அடுத்து உள்ள சரபேந்திரராஜன்பட்டிணத்தை
சேர்ந்தவர் காளிமுத்து மனைவி தனம் (40). இவரது மகள் ஜெயலட்சுமி (24).
பேராவூரணி பொன்காடு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவருக்கு ஜெயலட்சுமியை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. ஜெயலட்சுமியும் நீலகண்டனும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனம், அவரது 2வது மகள் புனிதா (20) ஆகியோரை அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் மாசிலாமணி, அவரது அண்ணன் மருதமுத்து, மனைவி ராஜலட்சுமி, மகள் வெற்றி செல்வி ஆகியோர் வழிமறித்து தாக்கினர்.
இதில் காயமடைந்த இருவரையும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தனம் கொடுத்த புகாரின்பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 4 பேரையும் தேடி வருகின்றனர்.


0 comment(s) to... “அதிரைஅருகே தாய், மகள் மீது தாக்குதல் உறவினர்கள் மீது வழக்கு”