பட்டுக்கோட்டை அருகே தந்தையை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
Posted March 17, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
நேற்று மாலை 5 மணியளவில் காமராஜ் தந்தை மருதமுத்துவிடம் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டு கொண்டிருந்தார். இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ் அருகே கிடந்த அரிவாளை எடுத்து மருதமுத்துவை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காமராஜ் மற்றும் சிலர் சேர்த்து மருதமுத்துவின் உடலை வீட்டுக்கு பின்னால் 50 அடி தூரத்தில் குழி வெட்டி புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதில் தொடர்புடையவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இன்று காலை பட்டுக்கோட்டை தாசில்தார் முன்னிலையில் மருதமுத்துவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
news by malaimalar
0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே தந்தையை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு”