பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
Posted March 04, 2015 by Adiraivanavil in Labels: SDPIஇந்த போராட்டதிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மத் இல்யா
ஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள் . இதில் மாவட்ட துணை தலைவர் M.அமானுல்லா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .மதுக்கூர் நகர தலைவர் அசர் அவர்கள் கண்டன கோசங்கள் எழுப்பினார்கள் .மேலும் வழக்கறிஞர் அதிரை நிஜாம் அவர்கள் சிற்றுரை வழங்கினார்கள் . கண்டன உரையை SDTU மாநில துணை தலைவர் சம்சுதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள் . மேலும் இதில் எஸ்டிபிஐ கட்சியின் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஆசாத்,வழக்கறிஞர் முஹம்மத் தம்பி , அதிரை நகர தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக நன்றியுரை அதிரை நகர துணை தலைiவர் அன்வர் அவர்கள் ஆற்றினார்கள். மேலும் லஞ்சம் ஊழலுக்கு எதிரான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்”