மதுரை பெண் விமானம் ஓட்டி சாதனை

Posted March 25, 2015 by Adiraivanavil in Labels:
 மதுரையை சேர்ந்த, 19 வயது பெண்ணுக்கு, தனியாக விமானம் ஓட்ட
, பெங்களூரு ஜக்கூர் அரசு பயிற்சி விமான நிலையத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. மதுரையில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் காவ்யா, 19. இவர், ஆறரை ஆண்டுகளுக்கு முன், ஜக்கூருவில் உள்ள அரசு விமான பயிற்சி நிலையத்தில், விமானியாக பயிற்சி பெற சேர்ந்தார்.

காவ்யா, மிக திறமையாக ஓடுதளத்திலிருந்து கிளம்பவும், தரையிறங்கவும் கற்றுக் கொண்டார். இந்நிலையில், தனியாக, 'செஸ்னா 173' என்ற விமானத்தை, 15 நிமிடம் ஓட்டி சாதனை படைத்தார்.இந்நிலையில், பைலட் லைசென்ஸ் பெற, மேலும் சில மணி நேர பயிற்சிகள் உள்ளன. பணமும் தேவைப்படுகிறது. ஆகவே, அமைச்சர் பரிந்துரையுடன், அரசுக்கு நிதி ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.“இவரது சாதனை, மற்ற பெண்களுக்கு வழிகாட்டியாகவும், ஆர்வத்தை துாண்டுவதாகவும் இருக்கும்,” என்று, தலைமை விமான பயிற்சியாளரும், இயக்குனருமான ஓய்வு பெற்ற விங் கமாண்டர் அமர்ஜித் சிங் டாங்கே கூறினார்.


0 comment(s) to... “மதுரை பெண் விமானம் ஓட்டி சாதனை”