இஸ்லாத்தைக் கற்பிக்கும் ஜப்பான் பள்ளிவாசல்!
Posted March 25, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
பள்ளிவாசலைப் பார்வையிட வருவோருக்கு இஸ்லாம் பற்றிய விடயங்களும் இஸ்லாத்தின் உண்மைத் தன்மையும் கற்பிக்கப்படுகின்றது.
இஸ்லமிய தேசம் (ISIL) எனக் கூறப்படும் ஆயுதக் குழுவினரால் இரண்டு ஜப்பானிய பிரஜைகள் சிரியாவில் பணயக் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இப் பள்ளிவாசலுக்கு வருகைத் தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பணயக் கைதி பிரச்சினைக்கு முன்னர் வாரஇறுதி நாட்களில் சராசரி 20 பேர் வரை வருகை தந்தனர். தற்போது இவ் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
"இஸ்லாம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதை பணயக் கைதிகள் விவகாரம் நடைபெற்றபோது நான் முதன் முறையாக உணர்ந்துகொண்டேன்" எனக் கூறினார் யூகி ஒபாயாஷி (Yuki Obayashi), வயது 22, டோக்யோ பல்கலைக் கழக சிரேஷ்ட மாணவர். பெப்ரவரி 28-ம் திகதி டோக்யோ காமி பள்ளிவாசலில் சுற்றுலாவை மேற்கொண்டபோது அவர் இத் தகவலைத் தெரிவித்திருந்தார்.
சுற்றுலாவில் கலந்துகொள்வோர் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்களின் வழிபாடுகள் நடைமுறைகள் பற்றியும் பலவிதமான விடயங்களைக் கேட்டு அறிந்துகொள்கின்றனர். தொழுகை நேரத்தில் தொழுகையில் ஈடுபடுவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பள்ளிவாசலின் தோற்ற வரலாறு
டோக்யோ காமி பள்ளிவாசல் மே 12, 1938-ம் திகதி ரஷ்யாவின் ஒக்டோபர் (கம்யூனிசப்) புரட்சியின் பின்னர் புலம்பெயர்ந்த தாத்தாரிய முஸ்லிம்களினால் நிருமாணிக்கப்பட்டது. இப் பள்ளிவாசலுடன் இணைந்ததாக பாடசாலையொன்றும் நிறுவப்பட்டது.
பிற்காலத்தில் பல திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட டோக்யோ காமி பள்ளிவாசல் ஜூன் 30, 2000-ம் ஆண்டு புதிய பள்ளிவாசலாக மீள்நிருமாணம் செய்யப்பட்டது. இச் சுற்றுலா திட்டம் 2014 ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.
ஜப்பானில் சுமார் 70 - 80 பள்ளிவாசல்கள் இருப்பதாக ஜப்பான் முஸ்லிம் சம்மேளனம் கூறுகின்றது. 127 மில்லியன் மக்கள் வாழும் உலகின் பத்தாவது சனத்தொகையைக் கொண்ட ஜப்பானில் முஸ்லிம்களின் தொகை சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் வரையாகும்.

தகவல்: OnIslam
0 comment(s) to... “இஸ்லாத்தைக் கற்பிக்கும் ஜப்பான் பள்ளிவாசல்!”