அதிரை அருகே தீராத வயிற்றுவலி விஷம் குடித்து மீனவர் சாவு

Posted March 16, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை அருகேஉள்ள அடைக்கத்தேவன் கிராமத்தை சேர்ந்த மீனவர்
முருகானந்தம் (26). இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நீண்ட நாட்களாக முருகானந்தம் வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகானந்தம் நேற்றுமுன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


0 comment(s) to... “அதிரை அருகே தீராத வயிற்றுவலி விஷம் குடித்து மீனவர் சாவு”