வாலிபருக்கு அரிவாள் வெட்டு, வீட்டுக்கு தீ வைப்பு: 19 பேர் கைது; 33 பேர் மீது வழக்கு

Posted March 05, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக நடந்த தகராறில் வாலிபர் அரிவாளால் வெட்டப் பட்டார். இதன் எதிரொலியாக வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் 8 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
மேலும் 33பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சம்பவங்கள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் மஞ்சு கோட்டகத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் வருண் (வயது19). அதே ஊரை சேர்ந்தவர் மகாதேவன். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு வருண் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மகா தேவன் மற்றும் அவருடைய தரப்பினர் வருணை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர்.
இதில் கழுத்து, தோள் பட்டை, கை உள்பட உடலின் பல பாகங்களில் படுகாயம் அடைந்த வருண் திருத்துறைப் பூண்டி அரசு மருத்து வமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக வருணின் தரப்பினர் மகா தேவனின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. இதேபோல மகா தேவனின் நண்பர் ராஜேந் திரன் என்பவருடைய வீடும் சூறையாடப்பட்டது. அரி வாள் வெட்டு, வீட்டுக்கு தீ வைப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அருண், அன்பழகன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மஞ்சுகோட்டகம் பகுதியில்குவிக்கப்பட்டுள் ளனர்.
33 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக இரு தரப் பினரும் எடையூர் போலீசில் புகார் கொடுத்தனர். மகா தேவன் தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் 30 பேர் மீதும், வருண் தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் 3 பேர் என 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் வருண் தரப்பை சேர்ந்த ரஜினி உள்பட 7 பேர் கைது செய்யப் பட்டனர்.
மற்றொரு தரப்பில் மகாதேவன் கைது செய்யப் பட்டுள்ளார். இரு தரப்பு மோதல் காரணமாக மஞ்சு கோட்டகம் பகுதியில் நேற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

படம் செய்தி:
நிருபர் :.பி‌விநாகராஜன்


0 comment(s) to... “வாலிபருக்கு அரிவாள் வெட்டு, வீட்டுக்கு தீ வைப்பு: 19 பேர் கைது; 33 பேர் மீது வழக்கு”