
பங்குனி 5–ந்தேதியான இன்று காலை 6 மணி அளவில் வசிஷ்டேஸ்வர சுவாமி (மூலவர்) மீது சூரிய ஒளி பரவியது. இதனை காண அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் சூரிய ஒளி மூலவர் மீது விழும் காட்சியை கண்டு பரவசத்துடன் வழிபட்டனர்.
கரிகால்சோழன் குஷ்டநோயால் வருந்தினான். அவன் இக்கோவில் மூலவரை வழிபட்டு நோய் நீங்க பெற்றான். இதனால் மகிழ்ச்சி அடைந்த கரிகால் சோழன் வசிஷ்டேஸ்வரர் கோவிலை கட்டியதாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது. கரிகால் சோழனுக்கு அருள் புரிந்ததால் சுவாமி கருணா சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
சுவாமி மீது சூரியஒளி விழுந்ததையொட்டி கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
0 comment(s) to... “சிவலிங்கம் மீது சூரியஒளி: பக்தர்கள் பரவசம்”