பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க மக்கள் அடிக்கடி கைகழுவ வேண்டும்

Posted March 24, 2015 by Adiraivanavil in Labels:

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் அடிக்கடி கைகழுவ வேண்டுமென வட்டார மருத்துவ அலுவலர் அறிவுரை வழங்கினார்.
பட்டுக்கோட்டை கண்டியன்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரத்துறை, ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன் வாடி பணியாளர்களுக்கு பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். கூடு தல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நாடியம்பாள்புரம் மையத்தில் நடந்த முகாமிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுசிலா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர்கள் சாந்தி, கமலா, அஞ்சலிதேவி, தனலீலா முன் னிலை வகித்தனர். ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். முகாமில் வட் டார மருத் துவ அலுவலர் டாக்டர் அறிவழகன், மருத்துவ அலுவலர்கள் விடுதலைவேந்தன், ரேவதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விவேகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர்கள் ரவிச்சந்தி ரன், காசிநாதன், வெங்க டேஷ் ஆகியோர் பேசினர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் பேசுகையில், பன்றி காய்ச்சல் 20 சதவீதம் காற்றின் மூலமும், 80 சதவீதம் தூய்மை செய்யப்படாத கைகள் மூலம் நோயாளிகளிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்த இன்பூளுயென்சா ஏ (ஹெச் 1 என் 1) வைரஸ் கிருமிகள் ஈரமான இடத்தில் 48லிருந்து 72 மணி நேரமும், உலர்ந்த இடங்களில் 24 மணி நேரமும் உயிருடன் இருக்கும். பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க அனை வரும் அடிக்கடி கைகழுவ வேண்டும். ஆசிரியர்கள் உங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் மூலம் இப்பழக்கம் பெற்றோர்களை சென்றடையும். பன்றி காய்ச்சலை குணப்படுத்தும் �டாமிப்ளூ� மாத்திரைகள் போதியளவு அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே காய்ச்சல் இருந்தால் சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது என்றார்.
முகாமில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வினாடிவினா போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் வெங்கடேஷ் பரிசு வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.



0 comment(s) to... “பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க மக்கள் அடிக்கடி கைகழுவ வேண்டும்”