சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Posted March 12, 2015 by Adiraivanavil in Labels:
சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்முத்துப்பேட்டை ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த ஒன்றிய மாநாடு
தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் முருகையன், துணைச் செயலாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் மாரியம்மாள், அவரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமசாமி வரவேற்று பேசினார். முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில் போராட்டம் குறித்து ஒன்றிய செயலாளர் ஜெகஜோதி விளக்கி பேசினார். மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் செல்லக்குஞ்சி, செயற்குழு உறுப்பினர்கள் பிரேமா, எலிசபத்ராணி, செல்வி ஆகியோர் பேசினர்.
சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப பாதுகாப்புடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் 3500 வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் ஒன்றிய பொருளாளர் சந்தானலட்சுமி நன்றி கூறினார்


0 comment(s) to... “சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்”