அ.தி.மு.க உள்கட்சி தேர்தலில் தகராறு, கூச்சல், குழப்பம். நகரச் செயலாளருக்கு 3 பேர் போட்டி. பரபரப்பு.
Posted March 20, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
காம்பளக்சில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் தற்பொதைய நகர செயலாளர் அருணாச்சலம் தலைமையில் ஒரு குழு அனைத்து பொருப்புக்கும் ஆட்களை தேர்வு செய்து மனு தாக்கல் செய்தனர். அதே போன்று மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் மங்கள் அன்பழகனும், தென்னை வளர்ச்சி குழு உறுப்பினர் செல்லபாண்டியனும் அருணாச்சலத்தை எதிர்த்து நகரச் செயலாளருக்கு மனுதாக்கல் செய்தனர். அப்பொழுது அ.தி.மு.க பிரமுகர் யானை காலிது என்பவர் மாவட்ட பிரதிநிதிக்கு மனு தாக்கல் செய்தார். அப்பொழுது நகர செயலாளர் அருணாச்சலத்தின் ஆதர்வாளரான நகர அவைத்தலைவர் கோவிந்தராஜ் நாங்கள் எல்லா நிர்வாகிகளையும் தேர்வு செய்து மனு தாக்கல் செய்து விட்டோம் மற்றவர்கள் மனுதாக்கல் செய்வது வேஸ்ட். அந்த பணத்தை டொனேசனாகதான் சேரும் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த யானை காலிது கோவிந்தராஜிடம் கடும் ரகளையில் ஈடுப்பட்டார். இதனால் இருவருக்குள் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு நிலைமைக்கு வந்தது. அதன் பின்னர் அயூப்கான் என்பவர் அருணாச்சலம் அணியில் மாவட்ட பிரதிநிதிக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு தான் தரம் முடியும் என்று கூறியதால் அருணாச்சலத்திடம் கடும் ரகளையில் ஈடுப்பட்டார். அதே போல் தற்போதைய பேரூராட்சி கவுன்சிலர் நாசர் நகரத்துணைச் செயலாளர் பதவி கேட்டு தகராறில் ஈடுப்பட்டார். இது போன்று மற்ற பதவிகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு பதவி கேட்டு அருணாச்சலத்திடம் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் காலை முதல் மாலை வரை அப்பகுதியில் பெரும் தகராறு, கூச்சல், குழப்பம் ஏற்பட்டு பரபரப்பானது. மாலை முடிவில் நகர செயலாளருக்கு அருணாச்சலம், மங்கள் அன்பழகன், செல்லப்பாண்டியன் ஆகியோரும், துணைச் செயலாளருக்கு மைனூர்தீன், நாசர், சேக்தாவூது ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதே போன்று அவைத் தலைவருக்கு கோவிந்தராஜ், பொருளாளருக்கு நடராஜனும். அதே போன்று 3 மாவட்ட பிரதிநிதிக்கு 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய நகரச் செயலாளர் அருணாச்சலம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் காமராஜுக்கு தெரியவந்துள்ளதால் நகர செயலாளர் பதவிக்கு மங்கள் அன்பழகன் தான் தேர்வு செய்யப்படுவார் என்று நிர்வாகிகள் மத்தியில் நேற்று பேசபட்டதால் தற்போதைய அருணாச்சலம் அணியினர் கடும் அதிர்ச்சியில் காணப்பட்டனர்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை

0 comment(s) to... “அ.தி.மு.க உள்கட்சி தேர்தலில் தகராறு, கூச்சல், குழப்பம். நகரச் செயலாளருக்கு 3 பேர் போட்டி. பரபரப்பு.”